தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கும்பகோணம் அரசுக் கல்லூரியின் மைதானம் கல்லூரி மாணவர்களுக்கே! இந்திய மாணவர் சங்கம் கையெழுத்து இயக்கம்

1 Feb 2026, 3:51 pm
கும்பகோணம் அரசுக் கல்லூரியின் மைதானம் கல்லூரி மாணவர்களுக்கே! இந்திய மாணவர் சங்கம் கையெழுத்து இயக்கம்
<p><strong>கும்பகோணம் அரசுக் கல்லூரியின் மைதானம் கல்லூரி மாணவர்களுக்கே! இந்திய மாணவர் சங்கம் கையெழுத்து இயக்கம்</strong></p> <p>கும்பகோணம், பிப்.1 - கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி யின் பாரம்பரியமான விளையாட்டு மைதா னத்தில் பல்வேறு விளையாட்டு மாண வர்கள் வெற்றி பெற்று பல்வேறு துறை களில் பணியாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட பாரம்பரிய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில், தமிழக அரசின் &nbsp;விளையாட்டு துறையின் ஆணைக்கிணங்க சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு தமிழக துணை முதல்வரும் இளைஞர் நலன் &nbsp;மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் திட்டத்தை துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. &nbsp;ஆனால் கும்பகோணம் அரசு கலைக் &nbsp;கல்லூரி மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதால் மூன்று துறை கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் மாண வர்கள் கல்விப் பயலும் இடவசதியை இழக்க &nbsp;நேரிடுகிறது. எனவே விளையாட்டு அரங்கத்தை &nbsp;மாற்றம் செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பாக கல்லூரி வாயில் முன்பு தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகை யில், &nbsp;&ldquo;கல்லூரி மைதானம் கல்லூரி மாணவர் களுக்கே&rdquo; என்ற முழக்கத்துடன் கும்பகோ ணம் கல்லூரி இந்திய மாணவர் சங்கம் கிளை &nbsp;சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. &nbsp;கையெழுத்து இயக்கத்திற்கு கிளைத் &nbsp;தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கல்லூரியின் கிளைச் செயலாளர் மகேஸ்வ ரன் விளக்கிப் பேசினார். மாவட்டச் செயலா ளர் ஹரிஷ் கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.