தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிதாங்கி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

5 Jun 2026, 10:34 pm
குடிதாங்கி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
<p><strong>குடிதாங்கி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கும்பகோணம், ஜுன் 5- கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்திடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கும்பகோணம் ஒன்றியம் சார்பில், கும்பகோணம் காந்தி பார்க் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p><p>ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் குடிதாங்கி பாக்கியராஜ் தலைமை வகித்தார். ஒ</p><p>ன்றிய பொருளாளர் குண சேகரன் துணைச் செயலாளர் பாலமுருகன், ஜெயபால், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். </p><p>ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்கு மார் மாவட்ட துணைச் செயலாளர் கணேசன், ஒன்றியச் செயலாளர் ராஜா, விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் உரையாற்றினர். </p><p>கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்திட வேண்டும். கூட்டுறவு பயிர் கடனை பாரபட்சமின்றி முழுவதும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். </p><p>கும்ப கோணம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குடிதாங்கியில் தடுப்பணை கட்டிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.