தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றுத்திறன் வீரர்களின் நம்பிக்கை நட்சத்திரம்!

24 May 2026, 9:22 pm
மாற்றுத்திறன் வீரர்களின் நம்பிக்கை நட்சத்திரம்!
<p><strong>மாற்றுத்திறன் வீரர்களின் நம்பிக்கை நட்சத்திரம்!</strong></p><p>மனித வாழ்வில் சவால்கள் என்ப வை எழுச்சிக்கான படிக்கற் கள் என்பதை நிரூபிக்கி றது. வாழ்ந்து காட்டும் உதா ரணங்கள் அரிதானவை. </p><p>ஆனால், கர்நாடகாவின் மண்டியா மாவட்டம், கொப்பா கிராமத்தில் 1959 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பிறந்த கே.எஸ்.ராஜ ண்ணா அந்த அரிய மனிதர் களில் ஒருவர்.</p><p> இன்று அவர் வெறும் உயிர் மூச்சுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் அல்ல. </p><p>மாறாக, நூற்றுக் கணக்கான மாற்றுத்திற னாளிகளின் வாழ்வில் வெளிச்சம் ஏற்றி, சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்து கொண்டிருக் கிறார். </p><p>குழந்தைப் பருவத்தின் கொடூர சோதனை! 11 வயதில் ராஜண்ணா வின் வாழ்வில் பேரிடி வந்து சேர்ந்தது. </p><p>இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ நோய் அவரது உடலைத் தாக்கியது. </p><p>கைகளையும் கால் களையும் பயன்படுத்தும் சக்தியை அது முற்றிலும் பறித்து விட்டது. </p><p>சாதாரண குழந்தைகள் விளையாடி ஓடிக்கொண்டிருந்த வய தில், ராஜண்ணாவோ தனது உடலின் அடிப்படை இயக்கங் களையே இழந்து நின்றார். </p><p> ஆனால், அவரது இத யத்தில் எரிந்த வெற்றி வேட்கையின் தீயை அணைக்க அந்த நோயால் முடியவில்லை. </p><p>தோல்வி யை ஏற்க மறுத்த அந்த இளம் உள்ளம், முழங்கா லில் நடக்கக் கற்றுக்கொண் டது. </p><p>அது வெறும் நடை அல்ல, வாழ்க்கையை வெல்வதற்கான முதல் படி. </p><p>எதிர்காலத்தை வடிவமைத்த கல்வி உடல் ஊனம் கல்வியறி வுக்கு தடையாக இருக்க முடி யாது என்பதை ராஜண்ணா தனது செயல்களால் நிரூ பித்தார். </p><p>எஸ்எஸ்எல்சி படிப்பை முடித்த அவர், இயந்திர பொறியியலில் டிப்ளமோ பட்டம் பெற்றுள் ளார். </p><p>எழுதுதல், நடத்தல், ஓடுதல், நீந்துதல், நீரில் மிதத்தல், நான்கு சக்கர வாக னம் ஓட்டுதல் என இயலா மையின் சாத்தியங்களை மறுக்கும் ஒரு வாழும் புராண மாக மாறியது. </p><p>கலைத் திறமையும் சமூகப் பணியும் விளையாட்டு மட்டு மல்ல, கலைத்துறையிலும் ராஜண்ணா தனித்துவமான முத்திரை பதித்திருக்கிறார். </p><p>1971-72ஆம் ஆண்டு கர்நா டக மாநில அளவிலான ஓவி யப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார். </p><p>1980ஆம் ஆண்டில் சுய தொழில் திட்டத் தின் கீழ் ‘ஷைன் டிசேபிள்ட் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற நிறு வனத்தை நிறுவியவர், இந்த நிறுவனத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கு வேலைவாய்ப்பு அளித்திருக்கிறார். </p><p>ஆயிரக் கணக்கான ஏழை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, அரசாங்க நலத் திட்டங்களைப் பெற வழி காட்டியாக இருந்துள்ளார்.</p><p> சுயதொழில் தொடங்கவும், கண்ணியமான வாழ்க்கை வாழவும் உறுதுணையாக நின்றார்.</p><p> பாராலிம்பிக் மேடையில் தேசத்தின் பெருமை 2002ஆம் ஆண்டு மலேசி யாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச பாரா லிம்பிக் போட்டிகளில் இந்தி யாவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார். </p><p>வட்டு எறிதலில் தங்கப் பதக்கமும், நீச்சலில் வெள்ளிப் பதக்கமும் வென்று நாட்டுக்குப் பெரு மை சேர்த்தார்.</p><p> அவரது விளை யாட்டுத் திறமை சர்வதேச அரங்கில் இந்தியக் கொடி யை உயர்த்தியது மட்டு மல்ல, மாற்றுத்திறனாளி களின் வலிமையை உல குக்கு உணர்த்தியது. </p><p>நிர்வாகத்திலும் சமூக நீதியிலும் முன்னோடி கர்நாடக மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக் கான ஆணையராக பணி யாற்றிய முதல் மாற்றுத்திற னாளி ராஜண்ணா தான். </p><p>அவ ரது முயற்சிகள் மாநிலம் முழுவதும் மாற்றுத்திற னாளிகளுக்கு உகந்த சூழலை உருவாக்கி, அவர் களது வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தியது. </p><p> விருதுகளும் சாதனைகளும் ராஜண்ணாவின் பங்களி ப்புகள் பல விருதுகளாலும் கவுரவங்களாலும் அங்கீக ரிக்கப்பட்டுள்ளன. </p><p>2003ஆம் ஆண்டு இந்திய அரசு, மாற்றுத்திறனாளிகளின் நல னுக்கான தேசிய விருதை வழங்கியது. </p><p>2020ஆம் ஆண்டு கன்னட ராஜ்யோத் சவ விருதையும், 2000ஆம் ஆண்டு சமூகப் பணி மற்றும் தொழிலதிபருக்கான மாநில விருதையும் கர்நாடக அரசு வழங்கியது. </p><p>2003இல் பெங்களூரு மகாநகர பாலிகே விளையாட்டுத் துறைக்கான கெம்பேகௌ டா விருதையும், 2014இல் கர்நாடக விஸ்வகர்மா ரத்னா விருதையும் பெற்றார்.</p><p> 2016ஆம் ஆண்டு கோகோ கோலா இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியா வின் லிம்கா புத்தக சாத னையில் அவரது பெயர் பதிவு செய்யப்பட்டது. </p><p>2017இல் இந்தியன் விர்ச்சுவல் யுனிவர்சிட்டி பார் பீஸ் அண்ட் எஜுகேஷன் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. </p><p>2023இல் அகில பாரத கன்னட சாகித்ய பரிஷத் கௌரவ விருது வழங்கியது. </p><p>இவை அனைத்தையும் தாண்டி, 2024ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி இந்தி யக் குடியரசுத் தலைவர் திரௌ பதி முர்மு அவர்களிட மிருந்து பத்மஸ்ரீ விருது பெற்றது அவரது வாழ்வின் உச்சக்கட்ட அங்கீகாரமாக அமைந்தது. -சி.ஸ்ரீராமுலு</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.