கொடைக்கானல் காமனூரில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பொருட்கள் கண்டெடுப்பு
17 May 2026, 9:01 pm
<p><strong>கொடைக்கானல் காமனூரில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பொருட்கள் கண்டெடுப்பு </strong></p><p>திண்டுக்கல், மே 17- திண்டுக்கல மாவட்டம் கொடைக் கானல் காமனூரில் இந்திய தொல்லி யல் துறையின் சார்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்ற அகழாய்வில் பெருங்கற்காலத்தைச் சேர்நத பொருட் கள் முற்கால மனிதனின் சவக்குழிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>இது தமிழக வரலாற்றறில் இன்னொரு ஆதிச்ச நல்லூராக விளங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. அது பற்றிய விவரம் வருமாறு: கொடைக்கானல் வட்டம் தாண்டிக் குடி அருகேயுள்ளது காமனூர். </p><p>இந்த கிராமத்தில் இந்திய தொல்லியல் துறை கடந்த ஜனவரி மாதம் முதல் அகழாய்வில் ஈடுபட்டு வருகிறது. டால் மென்களின் தொகுப்பாக அடையாளம் காணப்பட்ட ஒரு சவக்குழி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. </p><p>அந்த சவக்குழிகளில் ஈமச்சடங்கு பொருட்கள் கிடைத்தன. </p><p>இதுவரை 7 அறைகள் அடையாளம் காணப் பட்டுள்ளன. இரண்டு இணையான வரிசையில் அமைந்துள்ள அந்த டால்மென்கள் பகுதியில் கிடைத்த சவக் குழிகளில் ஒவ்வொரு வரிசையிலும் 3 அறைகள் உள்ளன. அதே நேரத்தில் சிறிய அறை மேற்கு பகுதியில், ஒட்டு மொத்த சுற்றுச் சுவருடன் உள்ளன. </p><p>அந்த சுவர்களின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக தரைப்பல கைகளும், செங்குத்து கற்களையும் வைப்பதற்கு முன்பு, கட்டியவர்கள் அறைகளின் அடிப்பகுதியில் சிறிய கற்கள், மண், மற்றும் பானை ஓடுகள் ஆகியவற்றின் கலவையை நிரப்புப் பொருளாக பயன்படுத்தியுள்ளனர். </p><p>புதைகுழி முழு புதைகுழி வளாகமும் கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஒரு செவ்வக வடிவ, கல்லால் கட்டப்பட்ட சுவரால் சூழப்பட்டுள்ளது. </p><p>இந்தச் சுவர், உலர் கட்டுமான நுட்பங்களைப் பயன்படுத்தி ஓரளவு சீரான அடுக்குகளில் கட்டப் பட்டுள்ளது, பெரும்பாலும் கற்குவி யல் நிரப்புப் பொருட்களால் மூடப் பட்டுள்ளது. இது ஈமச்சடங்கு வடிவமை ப்பின் ஒரு முக்கிய பகுதியாக இருந்த தைக் காட்டுகிறது. </p><p>மீட்கப்பட்ட கலைப்பொருட்களில் இரும்புக் கத்தி, உளி, அம்பு முனை மற்றும் வாள் ஆகியவற்றுடன், கார்னிலி யன் (செதுக்கப்பட்ட மற்றும் செதுக்கப் படாத), அகேட், ஜாஸ்பர், சால்செ டோனி, லாபிஸ் லாசுலி, மற்றும் குவார்ட்ஸ் ஆகியவற்றால் செய்யப் பட்ட மணிகள், பதக்கங்களும் அடங்கும். </p><p>மிக முக்கியமாக, இந்தோ-பசிபிக் கண்ணாடி மணிகளுடன், சிவப்பு மட்பாண்டங்கள், சிவப்பு வழு வழுப்பான மட்பாண்டங்கள், கருப்பு மட்பாண்டங்கள், கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் போன்ற மட்பாண்டங்களும் ஏராளமாகக் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> ஏற்கெனவே பண்ணைக்காடு தாண்டிக்குடி பகுதிகளில் கிடைக்கப் பட்ட கல் பதுக்கைகள் மற்றும் டால்மென்களில் ஆய்வு செய்ததில் இரும்பு காலத்திற்கு முந்தைய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள் ளன. இந்த பொருட்கள் பெருங்கற் காலத்தைச் சேர்ந்தவையாக சொல்லப்பட்டன. </p><p>தற்போது மீண்டும் அதே பகுதியில் உள்ள காமனூரில் நடைபெற்ற அகழாய்வில் அதே பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பொருட் கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது கொடைக்கானல் பகுதியில் ஆதி பழங்குடிகள் வசித்ததற்கான அடையாளங்களாக திகழ்கின்றன. -இலமு,திண்டுக்கல்</p>
