தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் ஈனத்தனமானது; தமிழகத்திற்குத் தலைகுனிவு

11 Apr 2026, 5:30 am
எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் ஈனத்தனமானது; தமிழகத்திற்குத் தலைகுனிவு
<p><strong>எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் ஈனத்தனமானது; தமிழகத்திற்குத் தலைகுனிவு</strong></p><p>திண்டுக்கல், அக்.10- &quot;தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ள விமர்சனம் ஈனத்தனமானது; இது ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது&quot; எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடுமையாகச் சாடினார்.</p><p>திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமாரை ஆதரித்து விற்பனைப்பண்ணை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசினார். தரம் தாழ்ந்த அரசியல் விமர்சனங்கள் முதலமைச்சரைப் பார்த்து &#39;அரசியல் ரோடு இருக்கிறது&#39; என்று எடப்பாடி பழனிசாமி கேட்டிருப்பது நாகரிகமற்றது என கி.வீரமணி குறிப்பிட்டார்.</p><p>&quot;தங்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது தெரிந்து விட்டதால், எடப்பாடி பழனிசாமி மேலும் வாய்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார். இது பெரியார் மண், ஸ்டாலின் மீண்டும் ஆட்சியில் அமர்வது உறுதி. தரம் தாழ்ந்த விமர்சனங்களால் மக்களை திசை திருப்ப முடியாது&quot; என்றார்.</p><p>விஜய் மற்றும் அதிமுக குறித்த சாடல் நடிகர் விஜய் குறித்துப் பேசுகையில், &quot;சினிமாவிலிருந்து வந்து ஸ்டைல் காட்டியே சேர வேண்டியவர். நேரடியாகக் கல்லூரியின் முதல்வர் (Principal) ஆகியேன் என அவர் பிதற்றுவது போன்றதுதான் திண்டுக்கல்லில் கி.வீரமணி கண்டனம்! விஜய்யின் பேச்சு&quot; என ஒப்பிட்டார்.</p><p>மேலும், அதிமுகவில் இப்போது அண்ணாமலை இல்லை, எம்.ஜி.ஆர் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தைத் தில்லிக்கு அடமானம் வைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி எனச் சாடினார். &quot;கையாலாகாத இந்த எடப்பாடி என்று ஜெயலலிதா கேட்டிருப்பார். ஆனால் இப்போது அதிமுக சப்பைக் கட்டுகளின் தில்லிக்கு ஓடும் முதுகெலும்பற்ற தலைவர்களாக அதிமுகவினர் மாறிவிட்டனர்&quot; என்றார்.</p><p>அதிகாரிகள் மாற்றமும் வாக்காளர்களும் தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மாற்றப்படுவது குறித்துப் பேசிய கி.வீரமணி, &quot;தமிழகத்தின் நலனைப் பாதுகாக்கும் பகுத்தறிவுடன் கூடிய முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பார். அவருக்குத் தொல்லை கொடுக்கவே அதிகாரிகளை மாற்றியப் பூச்சாண்டி காட்டுகின்றனர்&quot; என்றார்.</p><p>&quot;நீங்கள் யாரை வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால் தமிழ்நாட்டு வாக்காளர்கள் மாற மாட்டார்கள். குஜராத்திலிருந்தோ, உத்தரப் பிரதேசத்திலிருந்தோ வாக்காளர்களை இறக்குமதி செய்ய முடியாது. வரும் தேர்தலில் மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்துத் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்&quot; என கி.வீரமணி பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.