தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.10 மதிப்புள்ள டயாப்பர் கசிவதில்லை; நீட் வினாத்தாள் கசிந்து விடுகிறது

13 May 2026, 9:09 pm
ரூ.10 மதிப்புள்ள டயாப்பர் கசிவதில்லை; நீட் வினாத்தாள் கசிந்து விடுகிறது
<p><strong>ரூ.10 மதிப்புள்ள டயாப்பர் கசிவதில்லை; நீட் வினாத்தாள் கசிந்து விடுகிறது</strong></p><p>பாட்னா நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பிரபல கல்வியாள ரும், யூடியூப்பருமான கான் சார் இந்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,”தேசிய தேர்வு முகமை என்பதை இனி ‘நம்பிக்கையற்ற முகமை (Non Trusted Agency)’ என்றே அழைக்க வேண்டும். </p><p>ஒவ் வொரு முறையும் வினாத்தாள் கசி கிறது, தேசிய தேர்வு முகமையால் ஒழுங்காக சாதாரண ஒரு தேர்வை நடத்த முடியவில்லை. </p><p>தேசிய தேர்வு முகமை என்பது ஒரு சாதாரண டெம்போ (4 சக்கர வாகனம்) போன்றது. </p><p>அதை ஒரு பெரிய விமானத்தைப் போல வானத்தில் பறக்க வைக்க முயற்சி செய்கிறார்கள், அது அவர்களால் முடியவில்லை. </p><p>ரயில்வே பிளாட்பாரங்களில்... நடப்பாண்டு நீட் தேர்வை சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள னர். </p><p>அதில் குறைந்தது 5 லட்சம் மாணவர்கள் ரயில்வே பிளாட் பாரங்களில் பாய் விரித்துப்படுத் துத் தூங்கி கஷ்டப்பட்டுத் தேர்வு எழுத வந்தவர்கள். </p><p>அவர்களை மீண்டும் தேர்வு எழுதச் சொல்வது எவ்வளவு பெரிய கொடுமை? நாங் கள் பணத்தைத் திருப்பித் தரு கிறோம் என்று தேசிய தேர்வு முகமை சொல்கிறது. </p><p>மாணவர் களின் பணத்தைப் பறித்து என்ன செய்யப் போகிறீர்கள்? அவர்களின் வாழ்க்கையை அல்லவா பறித்தி ருக்கிறீர்கள்! மாணவிகளின் எதிர்காலம் எத்தனையோ மாணவிகளின் எதிர்காலத்தை தேசிய தேர்வு முகமை சிதைத்துள்ளது.</p><p> வினாத் தாள் கசிவு என்பது வெறும் பேப்பர் கசிவு அல்ல, அது மாணவர்களின் வாழ்க்கை சிதைக்கப்படுவது.</p><p> பல மாணவிகளுக்கு இதன் காரண மாகத் திருமணம் நிச்சயம் செய் யப்படலாம் அல்லது மீண்டும் தேர்வு எழுத வீட்டிலிருந்து அனுப் பப்படாமல் போகலாம். </p><p>அரசை விட டெலிகிராம் பெரியதா? வினாத்தாள் கசிந்திருப்பதை மாணவர்கள் தான் கண்டுபிடித்துச் சொன்னார்கள். </p><p>தேசிய தேர்வு முகமை என்ன செய்து கொண்டிருந் தது? ஒரு அரசாங்கத்தை விட டெலிகிராம் (Telegram) செயலி பெரியதாகிவிட்டதா? அரசாங்கத் தின் மூக்கிற்கு அடியில் டெலி கிராம் மூலம் தேசிய தேர்வு முகமை யை கேலிப் பொருளாக்கி விட்டுச் செல்கிறார்கள். </p><p>கடுமையான தண்டனை தேவை வினாத்தாள் கசிவு தொடர்பாக முதலில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். </p><p>ஐஐடி அல் லது யுபிஎஸ்சி தேர்வுகளில் இது போல நடப்பதில்லை. 2024இல் குளறுபடிகள் நடந்தபோது யாருக்குத் தண்டனை கிடைத்தது? வினாத்தாளைக் கசிய விடுபவர் களுக்கு தூக்குத் தண்டனை வழங் கப்பட வேண்டும். </p><p>கோடிக்கணக் கில் சம்பாதிக்கும் அவர்களுக்கு இரண்டு ஆண்டுச் சிறை தண்டனை என்பது எதற்கும் உதவாது. </p><p>சிபிஐ அதிகாரிகள் இந்த மாணவர்களிட மிருந்து பாடம் கற்க வேண்டும். ரூ.10 மதிப்புள்ள குழந்தைகளின் டயாப்பர் ரூ.10 மதிப்புள்ள குழந்தை களின் டயாப்பர் கசிவதில்லை. ஆனால் நீட் வினாத் தாள் மட்டுமே கசிந்துவிடுகிறது. </p><p>நாங்களும் வினாத் தாள்களைத் (மாதிரி தேர்வுக்காக) தயாரிக்கிறோம், ஆனால் அவை கசிவதில்லை. </p><p>அப்படியிருக்கையில் நீட் வினாத் தாள் மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் கசிகிறது? இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும், பிரதமரின் அலுவல கமும் நேரடியாகத் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். </p><p>தவறு செய்தவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.