கருவூலம் காலி என்ற யுடிஎப் பொய்ப் பிரச்சாரம் அம்பலமானது ரூ.5,429 கோடி இருப்பதை உறுதியப்படுத்தியது தகவல் அறியும் உரிமை ஆவணம்
24 May 2026, 8:35 pm
<p><strong>கருவூலம் காலி என்ற யுடிஎப் பொய்ப் பிரச்சாரம் அம்பலமானது ரூ.5,429 கோடி இருப்பதை உறுதியப்படுத்தியது தகவல் அறியும் உரிமை ஆவணம்</strong></p><p>திருவனந்தபுரம் கேரள சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக் கைக்கு முன்னதாக, மே 1 அன்று,”இடது ஜனநாயக முன் னணி (எல்டிஎப்) அரசு பதவி வில கும்போது கருவூலம் காலியாகி விடும். </p><p>கேரள மாநிலம் திவாலாகி விட்டது” என மூத்த காங்கிரஸ் தலை வர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (யுடிஎப்) தலைவர்கள் ஆதார மின்றி பேசியது பெரும் விவா தத்தை ஏற்படுத்தின. </p><p>தற்போது முதலமைச்சராக இருக்கும் வி.டி.சதீசனும் கூட அப்போது,”கருவூலம் தொடர்பாக யுடிஎப் அரசு ஒரு வெள்ளை அறிக் கையை வெளியிடும்” என்று கூறி யிருந்தார். </p><p>வாக்கு எண்ணிக்கைக் குப் பிறகு கேரளத்தில் யுடிஎப் ஆட்சியை கைப்பற்றியது.</p><p> எனி னும் எல்டிஎப் அரசில் நிதியமைச்ச ராக இருந்த கே.என்.பாலகோபால் விமர்சனத்திற்குப் பதிலடியாக,” கருவூலம் காலி என்ற யுடிஎப் தலை வர்களின் பிரச்சாரம் பொய்யானது. </p><p>கருவூலத்தில் ரூ.5,000 கோடிக்கு (சுமார் 6,000 கோடி ரூபாய் உபரி) அதிகமாக பணம் உள்ளது.</p><p> கரு வூலத்தில் பூனை தூங்குகிறது என்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி யின் கேலி ஆதாரமற்றது. </p><p>கருவூ லத்தில் பணம் இருப்பதால்தான் வாக்குறுதிகளைச் செயல்படுத்த முடிந்தது” என அவர் கூறியிருந் தார். </p><p>இந்நிலையில், கே.என்.பால கோபாலின் தகவலை உறுதிப்படுத் தும் விதமாக பினராயி விஜயன் தலைமையிலான எல்டிஎப் அரசு பதவி விலகிய போது, கருவூ லத்தில் ரூ.5,429 கோடி மீதம் இருந்த தாக நிதித் துறையின் தகவல் அறி யும் உரிமை ஆவணம் வெளிப் படுத்துகிறது. </p><p>இதன் மூலம், மாநி லத்தின் நிதி நிலைமை வலுவாக இருப்பதும், அரசியல் நோக்கங்க ளுக்காகப் பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதும் அம்பல மாகி உள்ளது.</p>
