தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரளத்தில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு யுடிஎப் கூட்டணிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு

1 Jun 2026, 9:28 pm
கேரளத்தில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு யுடிஎப் கூட்டணிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு
<p><strong>கேரளத்தில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு யுடிஎப் கூட்டணிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு</strong></p><p>கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) ஆட்சி நடை பெற்று வருகிறது. முதலமைச்ச ராக வி.டி.சதீசன் உள்ளார். </p><p>இந்நிலையில், பள்ளி மாணவி களுக்கு மூன்று நாட்கள் வரை மாதவிடாய் விடுப்பு அளிக்கப் படும் என கேரள அரசு அறிவித்த தற்கு சொந்த மற்றும் கூட்டணிக் கட்சியினரே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். </p><p>யுடிஎப் கூட்டணியின் முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவர் நூர்பினா ரஷீத் கூறுகையில்,“மாதவிடாய் விடுமுறையை அறிவிப்பது பெண் களின் உடல்நலப் பாதுகாப்பு மீதான அக்கறையின் ஒரு நட வடிக்கையாகக் கருதப்பட்டாலும், நடைமுறையில் அது பெண்களின் தனியுரிமையைப் பாதிக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கக்கூடும். </p><p>பள்ளிகளிலும், கல்லூரிகளும் மாத விடாய் விடுப்பைக் கோரும்போது அல்லது பதிவு செய்யும்போது, ​​மாதவிடாய் நாட்கள் பொதுவெளி யில் தெரியவர வாய்ப்புள்ளது. இது பல குழந்தைகளுக்குத் தேவை யற்ற மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடும்” என அவர் கண்டனம் தெரி வித்தார். </p><p>அதே போல திருக்காக்கரா சட்ட மன்ற உறுப்பினர் உமா தாமஸ் (காங்கிரஸ்) கூறுகையில், “மாதவிடாய் என்பது ஒரு தெய்வீக நிகழ்வு. </p><p>அதை அலட்சியம் செய்யக் கூடாது. மாதவிடாய் விடுப்பு வழங் கப்படும்போது, ​​பதின்வயதின ரிடையே கேலியும் வசவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது” என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதே போல பாஜகவின் ஆர். ஸ்ரீலேகா,”மாதவிடாய் விடுப்பு அனுமதிப்பது அவமானகரமா னது. </p><p>மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட பெருமை. ஒவ்வொரு மாதமும் அவள் வகுப்பு க்குச் செல்லவில்லை. உள்ளூர் மக்களுக்குத் தெரிந்துவிடும். இது அவமானகரமானது” என அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.