கேரளத்தில் மோடி அரசுக்கு எதிராக பெரும் போராட்டங்கள்
5 Jun 2026, 9:05 pm
<p><strong>கேரளத்தில் மோடி அரசுக்கு எதிராக பெரும் போராட்டங்கள்</strong></p><p>மோடி அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகக் கேரளம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த விலை உயர்வுகள் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்ட வழிவகுத்துள்ளது. அதேவேளையில், சாமானிய மக்கள் மீது கடுமையான சுமையை ஏற்றியுள்ளன. மேற்கு ஆசிய மோதல்களுக்கு மத்தியில், உயர்ந்து வரும் விலைகளைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறியதைச் சுட்டிக்காட்டி ஜூன் 4 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக நடைபெற்ற பேரணிகள், தர்ணாக்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.</p>
