கேரளத்தில் ஜூன் 10 வரை கனமழை நீடிக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
5 Jun 2026, 9:08 pm
<p><strong>கேரளத்தில் ஜூன் 10 வரை கனமழை நீடிக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை</strong></p><p>கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பெய்யும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். </p><p>ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட 4 நாட்கள் தாமதமாக ஜூன் 4 அன்று தொடங்கியது.கேரளத்தில் பருவமழை தொடங்கி யதையடுத்து பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. ஒரு சில மாவட்டங் களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. </p><p>இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை தொடங்கியதன் காரணமாக கேர ளம் முழுவதும் ஜூன் 10ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. </p><p>இதுதொடர்பான அறிக்கையில் “ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் கண் ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வய நாடு, பாலக்காடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்ச ரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய 7 மாவட் டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக் கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் ஆறு கள், தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மலைப் பகுதிகளில் நிலச்சரிவு, மண் சரிவு, சேற்று தழுவல்கள் ஏற்படலாம். </p><p>இத னால் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப் பட்டு உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எச்சரிக்கையுடனும், கவனமுட னும் இருக்க வேண்டும்.</p><p>குறிப்பாக மாநி லம் முழுவதும் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். கடல், கடற்கரை பகுதி களில் அதைவிட வேகமாக காற்று வீசும். </p><p>கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீன வர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த கனமழை எச்சரிக்கை ஜூன் 10 வரை நீடிக்கும்” என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது</p>
