கேரள காங்கிரஸ் (எம்) கட்சி எல்.டி.எப்-இல் உறுதியாக நிலைத்திருக்கும்: ஸ்டீபன் ஜார்ஜ்
11 May 2026, 10:14 pm
<p><strong>கேரள காங்கிரஸ் (எம்) கட்சி எல்.டி.எப்-இல் உறுதியாக நிலைத்திருக்கும்: ஸ்டீபன் ஜார்ஜ்</strong></p><p>கோட்டயம் கேரள காங்கிரஸ் (எம்) இடது ஜன நாயக முன்னணியில் உறுதியாக நிலைத்திருக்கும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்டீபன் ஜார்ஜ் கூறினார். </p><p>மேலும் அவர் கூறுகையில், என்.டி.ஏ கூட்டணியில் இணைவது குறித்து வழி நடத்தல் குழுவில் விவாதம் நடந்ததாக வரும் செய்தி தவறானது. </p><p>அப்படி எந்த விவாதமோ கலந்துரையாடலோ நடைபெறவில்லை. </p><p>எந்தக் காரணத்திற்காகவும் எல்.டி.எப்-ஐ விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை.</p><p> அது கட்சியின் செயல்திட்டத்தில் இல்லை என்றும் அவர் கூறினார்.</p><p> தேர்தலுக்கு முன்பு சில ஊடகங்களின் உதவியுடன் யு.டி.எப் நடத்திய தவறான தகவல் பிரச்சாரம் எல்.டி.எப்-இன் வாக்கு களைப் பாதித்தது என்று வழிநடத்தல் குழு கூட்டத்திற்குப் பிறகு கேரள காங்கிரஸ் எம் தலைவர் ஜோஸ் கே.மாணி எம்.பி. தெளிவுபடுத்தினார். எல்.டி.எப்-க்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருப்பதாக அவர்கள் வேண்டுமென்றே தவ றான தகவல்களைப் பரப்பினர்.</p><p> இதனால் எல்.டி.எப்-உடன் இருந்த சில சிறுபான்மை யினர் தங்களை விலக்கிக் கொண்டதாகவும் அவர் கூறினார். எல்.டி.எப் அரசின் வளர்ச்சி நிலைப்பாடு குறித்து யாரும் புகார் கூறவில்லை. </p><p>ஆனால், மக்களை முழுமையாகச் சென்றடைய முடிந்ததா என்றும் வளர்ச்சிக்கு ஒரு மக்கள் முகத்தைக் கொடுக்க முடிந்ததா என்பதை யும் ஆராய வேண்டும். </p><p>நாங்கள் இந்த பின்ன டைவிலிருந்து மீண்டு வலுவாக முன்னேறு வோம். </p><p>தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக பொதுக்குழு மாவட்ட மற்றும் தொகுதி அளவில் கூடி ஆராயும். </p><p>முன்னணி மாற்றம் என்ற பேச்சே இல்லை என்றும் ஜோஸ் கே. மாணி கூறினார். </p><p>ஆனாலும், பாஜகவில் இணைவது குறித்து வழிநடத்தல் குழு கூட்டத்தில் விவா திக்கப்பட்டதாகப் போலியான செய்தி ஊட கங்களில் பரப்பப்பட்டது.</p>
