தீக்கதிர் முக்கிய செய்திகள்
7 May 2026, 8:40 pm
<p><strong>சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்</strong></p><p>கேரளத்தில் பாஜக 3 சட்டமன்றத் தொகுதிகளை வென்றுள்ள போதிலும், என்.டி.ஏ கூட்டணியின் வாக்கு சதவீதம் 14.2% மட்டுமே. இது 2024 நாடாளுமன்றத் தேர்தலின் 19.24% வாக்கு சதவீதத்தையும், சில மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் 16% வாக்கு சதவீதத்தையும் விடக் குறைவானதாகும்.</p><p><strong>சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்</strong></p><p>வாக்குரிமை பறிக்கப்படும்போது, வேறு என்ன உரிமைகள் மறுக்கப்படக்கூடும் என்பதைச் சிந்தித்துப் பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. வாக்கு பறிப்பு முறைகேடுகளுக்கான தரவுகள் கைவசம் உள்ளன. எங்களிடம் உள்ள வாக்குரிமையில் செய்யப்பட்ட முறைகேடுகள் எவ்வாறு எதிர்பாராத தேர்தல் முடிவுகளுக்கு வழிவகுத்தன என்பதைக் காட்டுகின்றன.</p><p><strong>சிவசேனா (உத்தவ்) எம்.பி., அரவிந்த் சாவந்த்</strong></p><p>நேற்று பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என்று அழைக்கப்பட்டது; ஆனால் இன்று அமெரிக்கா - ஈரான் போருக்கு மத்தியஸ்தம் செய்யும் அளவிற்கு அந்நாடு பேசப்படுகிறது. நேற்று மோடி ‘விஷ்வகுரு’ என்று அழைக்கப்பட்டார். ஆனால் இன்று அவர் எங்கே நிற்கிறார் என்று தெரியவில்லை. </p><p><strong>டிஆர்எஸ் தலைவர் கே. கவிதா</strong></p><p>தெலுங்கானா அரசாங்கமும், ராகுல் காந்தியும் கையில் அரசியலமைப்புச் சட்டத்தை ஏந்தியபடி, விவசாய சகோதரர்களிடம் அவர்களின் நிலம் பறிக்கப்படாது என்று மீண்டும், மீண்டும் உறுதி அளித்தனர். ஆனால் தற்போது சுமார் 30,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.</p>
