முந்தய பக்கம்

கவிதைத் துளிகள் - காயத்ரி மாணிக்கம்

11 Jul 2026, 9:12 pm
கவிதைத் துளிகள் - காயத்ரி மாணிக்கம்
<p><strong>கவிதைத் துளிகள் - காயத்ரி மாணிக்கம்</strong></p><p><strong>இரவு..!</strong></p><p>அப்படியே உட்கார்ந்திருப்பதில்லை இரவு காலையிலிருந்து பகலெல்லாம் நடந்து சென்று நாளையும் உட்கார்ந்து கொள்வது அதன் இயல்பு!</p><p><strong>​மேக ஓவியங்கள்..!</strong></p><p>​வானத்துத் தூரிகையில் குளிர்க்காற்றைக் குழைத்துக் குழைத்து கொடுத்த நொடியில் வரையப்பட்டு விடுகின்றன மேக ஓவியங்கள் ரசித்துவிட்டே கீழே இறங்கி வருகின்றன மழைத்துளிகள்!</p><p><strong>வானவில்..!</strong></p><p>மழை மிரட்டல் இடி மின்னலுக்கு ஊடாகப் பயமற்று வண்ணச் சேலையுடுத்தி வந்துவிட்டுப் போகிறாள் வானவில் காதலி!</p>
Share
FacebookXWhatsAppTelegram