புதர்மண்டிக்கிடக்கும் குமரி மாவட்ட குளங்களில் நீரைச் சேமிக்க தூர்வாருக : விவசாயிகள் கோரிக்கை
19 May 2026, 10:12 pm
<p><strong>புதர்மண்டிக்கிடக்கும் குமரி மாவட்ட குளங்களில் நீரைச் சேமிக்க தூர்வாருக : விவசாயிகள் கோரிக்கை</strong></p><p>நாகர்கோவில் ,மே 19- தண்ணீர் சேமிக்க முடியாத நிலையில் உள்ள குமரி மாவட்ட குளங்களை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>குமரி மாவட்டத்தில் அதிகப்படியாக நெல் விவசாயம் செய்யப்படுகிறது. மேலும் வாழை,ரப்பர்,மா, பலா என விளை கின்றன. </p><p>நெல் விவசாயம் குமரி மாவட்டத்தில் இரு பருவங்களாக நடக்கிறது.</p><p>கன்னி பூ சாகுபடி, கும்பப்பூ சாகுபடி என இரண்டு வகையான சாகுபடிகள் நடக்கின்றன. இந்த விவசாயத்திற்கு பேச்சிப் பாறை, பெருஞ்சாணி ,மாம்பழத்துறை யாறு,சிற்றாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.</p><p>இந்த அணைகளில் இருந்து வரும் தண்ணீர் பல்வேறு குளங்களுக்கு சென்று, அங்கிருந்து வயல்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விவசாயம் நடக்கிறது. </p><p>குமரி மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட பெரிய குளங்கள் தற்போது விவ சாயத்திற்கு பயன்பட்டு வருகிறது.</p><p>இந்தக் குளங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி மணலால் நிறைந்து நிரம்பியுள்ளன. </p><p>சிறுமழை பெய்தால் கூட தண்ணீர் தேக்க முடியாத நிலையில் உள்ளது.</p><p>கனமழை பெய்தால் குளத்தில் இருந்து தண்ணீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.</p><p>மழைக் காலங்களில் பல்வேறு கிராமப் பகுதிகளுக்கும் தண்ணீர் புகுவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். </p><p> குறிப்பாக நாகர்கோவில் அடுத்த இறச்சகுளம், பெரிய குளம் உள்ளிட்ட குளங்கள் ஆக்கிரமிப்புகள் மற்றும் மண் குவியல்களால் நிறைந்து காணப்படுகிறது. </p><p>எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்க ளையும் தூர்வார வேண்டும். குமரி மாவட்டத்தின் விவசாயம் மற்றும் மக்களுக்கு உதவி செய்திட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
