தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரள மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்த கண்ணூர் பினராயி விஜயனுக்கு மாபெரும் வரவேற்பு

18 Mar 2026, 3:34 pm
கேரள மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்த கண்ணூர்  பினராயி விஜயனுக்கு மாபெரும் வரவேற்பு
<p><strong>கேரள மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்த கண்ணூர் &nbsp;பினராயி விஜயனுக்கு மாபெரும் வரவேற்பு</strong></p> <p>கண்ணூர், மார்ச் 18 -<br /> சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத் திற்காக கண்ணூர் வந்த முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.<br /> தங்களின் அன்புக்குரிய தலை<br /> வரை வரவேற்பதற்காக, கண்ணூர் விமான நிலையத்திலிருந்து அவர் போட்டியிடும் தொகுதியான தர்மடம் வரை ஆயிரக்கணக்கான மக்கள், சாலையோரங்களில் காத்திருந்தனர்.<br /> விமான நிலையத்தில் தரையிறங்கிய பினராயியை கட்சித் தொண்டர்கள் முழக்கங்களுடன் வரவேற்றனர். பின்னர் அவர் பயணம் செய்த வழி நெடுகிலும், பல இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள்&nbsp;<br /> புடைசூழ தொண்டர்கள் உடன் சென்றனர். முதலமைச்சர் பினராயி விஜயனை பார்ப்பதற்காக மக்கள் பல மணி நேரத்திற்கு முன்பே சாலையின் இருபுறமும் திரண்டிருந்தனர்.<br /> முதலமைச்சர் பல இடங்களில் தனது வாகனத்தை நிறுத்தி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு வழங்கப்பட்ட மாலைகளையும் பூங்கொத்துகளையும் அவர் அன்புடன் ஏற்றுக்கொண்டார்.<br /> தர்மடம் நோக்கிய அவரது பயணத்தில், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட ஏராளமான மக்கள் பங்கேற்றனர். விமான நிலையத்திலிருந்து தர்மடம் வரை ஒவ்வொரு இடத்திலும் தொண்டர்கள் மற்றும் கட்சி சாராத<br /> வர்களின் நீண்ட வரிசை காணப்பட்டது. இந்த வரவேற்பு, வரவிருக்கும் தேர்தல் போராட்டத்தில் தர்மடம் இடதுசாரிகளின் கோட்டையாகத் தொடரும் என்ற பிரகடனமாக அமைந்தது. கேரள மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக தர்மடம் வரவேற்பு இருந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.