சுவர்களைக் கடந்து இணைந்த சமூகம் கலைஞர் கமலா ரவிக்குமாரின் வண்ணமயமான முன்னெடுப்பு
15 Jun 2026, 12:49 am
<p><strong>சுவர்களைக் கடந்து இணைந்த சமூகம் கலைஞர் கமலா ரவிக்குமாரின் வண்ணமயமான முன்னெடுப்பு</strong></p><p>சென்னை கலாஷேத்ரா காலனியில் உள்ள ஒரு பூங்காவில், சுமார் 20 ஆண்டு களுக்கு முன்பு கலைஞர் கமலா ரவிக்குமார் வரைந்திருந்த ஓவி யங்கள் காலப்போக்கில் சிதைந்து போயின. </p><p>அந்தச் சுவர்கள் வெறும் வெற்றுச் சுவர்களாகக் காட்சியளித்ததைக் கண்ட அவர், மீண்டும் தனது தூரிகையைக் கையில் எடுத்தார். </p><p>அது வெறும் சுவரைப் புதுப்பிக்கும் பணியாக மட்டும் அமையாமல், ஒரு முழு சமூகத்தை யும் ஒன்றிணைக்கும் ஒரு அழகான முயற்சியாக மாறியது.</p><p>தொடங்கிய சில மாதங்களி லேயே, கலாஷேத்ரா காலனியின் ஆறு நீண்ட சுவர்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் பச்சை என வண்ணங்களால் உயிர் பெற்றன. </p><p>இந்த அழகுபடுத்தும் முயற்சியில் பின்னர் பலரும் இணைந்தனர். இருப்பினும், இதற்கான பெருமையை பங்கு போட்டுக்கொள்ள அவர் மறுக்கிறார். </p><p>“இது ஒரு சமூகத் திட்ட மாக மாறியது. காலனியின் குழந்தை கள், அவர்களின் பெற்றோர்கள், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவி கள் மற்றும் பல தொழில்முறை கலைஞர்கள் என அனைவரும் இணைந்து பணியாற்றினோம்,” என்று பெருமிதத்துடன் கூறுகிறார். </p><p>சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால், 2003-ல் பள்ளி மாண வர்களாக இருந்து அவரோடு ஓவியம் வரைந்தவர்கள், தற்போது தங்களின் குழந்தைகளுடன் மீண்டும் வந்து இந்த ஓவியப் பணியில் பங்கேற்றனர்.</p><p>எம்.ஜி.ஆர் சாலை, ருக்மணி சாலை, கடற்கரை சாலை மற்றும் அருண்டேல் கடற்கரை சாலை என ஒவ்வொன்றும் ஒரு கருப்பொருளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன. பரதநாட்டியத்தின் பாவங்கள் மற்றும் கண் அசைவுகள், சூரிய ஒளியில் மிளிரும் மஞ்சள் சுவர்கள், காக்டஸ் ஓவியங்கள் மற்றும் பூக்கள் என ஒவ்வொரு சுவரும் ஒவ்வொரு கதையைச் சொன்னது. </p><p>சூழலியல் பொறுப்புணர்வு குறித்த செய்திகளும் சுவர்களில் இடம்பெற்றன. இந்த மாற்றத்தினால், அந்தப் பகுதி தற்போது பலருக்கும் பிடித்தமான புகைப்படம் எடுக்கும் இடமாக மாறியுள்ளது. </p><p>“பலர் தங்கள் பகுதி சுவர்களையும் ஓவியங்களால் அழகாக்க என்னைத் தொடர்புகொள்கின்றனர்,” என்று கூறும் கமலா ரவிக்குமார், மக்கள் தங்கள் வசிப்பிடத்தைச் சுத்த மாக வைத்திருக்க வேண்டும் என்ப தில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று விரும்புகிறார். </p><p>“அழகான சூழல் இருக்கும்போது, மக்கள் தங்க ளுக்குச் சொந்தமான இடமாக அதைக் கருதி, அதைச் சுத்தமாக வைத்திருக்க முயற்சிப்பார்கள்,” என்பது அவரது நம்பிக்கை. இந்தத் திட்டம் அவருக்கு ஒரு வேலையாகத் தெரியாமல், ஒரு கொண்டாட்டமாகவே இருந்தது.</p><p>ஓவியம் வரைந்த நாட்களில், அந்தப் பகுதி மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சிற்றுண்டி மற்றும் காலை உணவை உண்டு, ஒரு குடும்பமாகப் பழகியதை அவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். </p><p>“பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டே சுவர்களை ஓவியம் வரைய வைத்தால், அவர்களுக்கு பொது இடங்களின் மீது அக்கறை பிறக்கும்,” என்று ஆலோசனை கூறும் அவர், தனது கலைப்பயணம் இத்துடன் நிற்காது என்கிறார். </p><p>வயது ஒரு தடையல்ல என்பதை உணர்த்தும் அவர், தனது அடுத்தடுத்த திட்டங்களுடன் ஆர்வத்துடன் பயணிக்கத் தயாராக இருக்கிறார்.</p><p>சென்னை போன்ற பெருநகரங்க ளில் உள்ள மற்ற குடியிருப்புகளும் இத்தகைய முன்னெடுப்புகளைச் செய்வதன் மூலம், தங்களின் சுற்றுப்புறத்தை அழகாகவும், பொறுப்புணர்வு மிக்கதாகவும் மாற்ற முடியும் என்பதற்கு கலா ஷேத்ரா காலனி ஒரு சிறந்த முன்னு தாரணமாகத் திகழ்கிறது.</p>
