முந்தய பக்கம்

கல்பாக்கம் வேக ஈனுலை இயங்கத்தொடங்கியது

9 Apr 2026, 5:30 am
கல்பாக்கம் வேக ஈனுலை இயங்கத்தொடங்கியது
<p><strong>கல்பாக்கம் வேக ஈனுலை இயங்கத்தொடங்கியது</strong></p><p>சென்னை, ஏப். 8- கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் ‘புரோட்டோடைப் வேக ஈனுலை’ கடந்த ஏப்ரல் 6 அன்று இரவு வெற்றிகரமாகத் தனது முதற்கட்டச் செயல்பாட்டை எட்டியது. இந்தியாவின் அணுசக்தித் தந்தை ஹோமி ஜஹாங்கீர் பாபா வகுத்த மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தில், இது மிக முக்கியமான இரண்டாம் கட்ட மைல்கல்லாகும்.</p><p>இந்த உலை, தான் நுகரும் எரிபொருளை விட அதிக அளவிலான எரிபொருளை உற்பத்தி செய்யும் தனித்தன்மை கொண்டது. இந்தியாவின் குறைந்த யுரேனிய வளத்தைக் கொண்டு, கைவசம் உள்ள அதிகப்படியான தோரியம் வளத்தைப் பயன்படுத்தும் எதிர்காலத் திட்டத்திற்கு இது ஒரு பாலமாக அமையும்.</p><p>முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில், திரவ சோடியம் குளிர்விப்பானைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சாதனை, இந்தியாவின் எரிசக்தி சுயசார்பை உறுதிப்படுத்துகிறது. இந்த வரலாற்று நிகழ்வை, அணுசக்தித் துறைச் செயலர் அஜித் குமார் மொஹந்தி உள்ளிட்ட விஞ்ஞானிகள் நேரில் கண்டு கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram