தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இன்றுடன் சித்திரைத் திருவிழா நிறைவு மலைக்கு திரும்பினார் கள்ளழகர்; உற்சாக வரவேற்பு

5 May 2026, 10:29 pm
இன்றுடன் சித்திரைத் திருவிழா நிறைவு மலைக்கு திரும்பினார் கள்ளழகர்; உற்சாக வரவேற்பு
<p><strong>இன்றுடன் சித்திரைத் திருவிழா நிறைவு மலைக்கு திரும்பினார் கள்ளழகர்; உற்சாக வரவேற்பு</strong></p><p>மதுரை, மே 5- உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திரு விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மதுரையிலிருந்து கள்ளழகர் செவ்வா யன்று அழகர்மலையில் உள்ள அழகர்கோவி லுக்கு திரும்பினார். </p><p>அவரை பக்தர்கள் என்ற கோஷங்களுடன் உற்சாகமாக வரவேற்ற னர். திருமாலிருஞ்சோலை என போற்றப் படும் அழகர்கோவில், 108 திவ்ய தேசங்க ளில் ஒன்றாகும். </p><p>இங்கு ஆண்டுதோறும் நடை பெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். </p><p>இந்தாண்டு விழா ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கி மே 6ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.</p><p> விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சிகளாக ஜனவரி 23ஆம் தேதி ஆயிரம் பொன் சப்பர முகூர்த்தம், ஏப்ரல் 17ஆம் தேதி கொட்டகை முகூர்த்தம் மற்றும் தலையலங்காரம் நடை பெற்றன. </p><p>தொடர்ந்து ஏப்ரல் 27ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்வுடன் திருவிழா தொடங்கி யது.</p><p> ஏப்ரல் 29ஆம் தேதி கள்ளழகர் மது ரைக்குப் புறப்பட்டு, 30ஆம் தேதி பக்தர் களின் எதிர்சேர்வை பெற்றார். </p><p>மே 1ஆம் தேதி அதிகாலையில் ஆயிரம் பொன் சப்பர விழா வும், பின்னர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் முக்கிய நிகழ்வும் நடைபெற்றது. </p><p>மே 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மண்டூக முனி வருக்கு சாபவிமோசனம் அளித்தார்.</p><p> தொடர்ந்து மோகினி அவதாரம் மற்றும் தசாவதார காட்சிகள் நடைபெற்றன.</p><p> மே 4ஆம் தேதி கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலை நோக்கி திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. </p><p>செவ்வாயன்று (மே 5) அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபத்திலி ருந்து கள்ளந்திரி வழியாக வந்த கள்ள ழகர், அழகர்கோவில் கோட்டைவாசலை அடைந்தார். </p><p>பின்னர் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு வையாழி யாகி, திருக்கல்யாண மண்டபம் அருகில் பக்தர்கள் மலர்தூவி வரவேற்றனர். </p><p>தொடர்ந்து கள்ளழகர் பரிவாரங்களுடன் கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார். பு</p><p>தனன்று (மே 6) காலை உற்சவ சாந்தி யுடன் சித்திரைத் திருவிழா நிறைவடை கிறது. </p><p>விழா ஏற்பாடுகளை துணை ஆணை யர்/செயல் அலுவலர் ஹரிஹரன் தலைமை யில் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.