கள்ளக்குறிச்சி: 177 சந்தாக்கள் ஒப்படைப்பு
19 Jul 2026, 9:03 pm
<p><strong>கள்ளக்குறிச்சி: 177 சந்தாக்கள் ஒப்படைப்பு</strong></p><p>கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘தீக்கதிர்’ சந்தா சேர்ப்பு இயக்கத்தின் முதல்கட்டமாக, 177 சந்தாக்களுக்கான தொகையை மாவட்ட நிர்வாகிகள் மாநிலக் குழு உறுப்பினர் பி.சுகந்தியிடம் ஒப்படைத்தனர். மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் வாசகர் வட்டத்தை விரிவுபடுத்தும் இப்பணியில் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் மற்றும் ஏழுமலை (கள்ளக்குறிச்சி), சிவாஜி (சங்கராபுரம்), மாரிமுத்து (சின்னசேலம்), பழனி (ரிஷிவந்தியம்), ஸ்டாலின் (உளுந்தூர்பேட்டை நகரம்), ரகுராமன் (உளுந்தூர்பேட்டை மேற்கு), ஜெயக்குமார் (திருநாவலூர் கிழக்கு), ஆனந்தராஜ் (திருநாவலூர் மேற்கு), வேலா பாலகிருஷ்ணன் (உளுந்தூர்பேட்டை கிழக்கு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
