கலசலிங்கம் பல்கலையில் 80-வது சுதந்திர தின விழா
16 Aug 2026, 9:54 pm
<p><strong>கலசலிங்கம் பல்கலையில் 80-வது சுதந்திர தின விழா</strong></p><p>ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.16-ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக துணைத்தலைவர் எஸ்.சசி ஆனந்த் தலைமை வகித்தார்.</p><p>பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.நாராயணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, என்.சி.சி. மாணவர்களின்அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பதிவாளர் வி.வாசுதேவன் மற்றும் கலசலிங்கம் கல்விக் குழும முதல்வர்கள் முன் னிலை வகித்தனர்.</p><p>நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இயக்குநர்கள், டீன்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், தொழில்நுட்பப் பணியாளர் கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
