வாலிபர் சங்கம் சார்பில் கபடிப் போட்டிகள் துவக்கம்
4 Jan 2026, 5:55 pm
<p><strong>வாலிபர் சங்கம் சார்பில் கபடிப் போட்டிகள் துவக்கம்</strong></p>
<p>கோவை, ஜன.4- வாலிபர் சங்கம் சார்பில் 31 ஆவது ஆண்டு பொங்கல் விளையாட்டு விழாவை முன் னிட்டு நடுப்பாளையம் கிரா மத்தில் கபடிப் போட்டிகள் சனியன்று துவங்கியது. இந்திய ஜனநாயக வாலி பர் சங்க கோவை மாவட்டம், சூலூர் தாலுகா நடுப்பாளையம் கிளை சார் பில் ஆண்டுதோறும் பொங்கல் விளையாட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச் சியாக, இந்த ஆண்டு நடுப்பாளையம் கிராமத் தில் 31 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சனியன்று இரவு கபடிப் போட்டிகள் நடை பெற்றது. இப்போட்டிகளை வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா துவக்கி வைத்தார். இளைஞர்களிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப் படும் இந்நிகழ்வில், சூலூர் தாலுகா தலை வர் பிரவீன்குமார், செயலாளர் குருசாரதி, பொருளாளர் உதயபாரதி ஆகியோர் முன் னிலை வகித்தனர். சனியன்று இரவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான கபடி அணிகள் பங்கேற்று விளை யாடி வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாலிபர் சங்கம் மேற் கொண்டுள்ள இந்த விளையாட்டு முன்னெ டுப்பு அப்பகுதி இளைஞர்களிடையே வர வேற்பைப் பெற்றுள்ளது.</p>
