அமோனியா வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்
24 Jun 2026, 11:54 pm
<p><strong>அமோனியா வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்</strong></p><p>திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தனியார் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை செவ்வாயன்று (ஜூன் 23) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
