தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் கே.பாலதண்டாயுதம் 53 ஆவது நினைவு தினம் கடைப்பிடிப்பு டி.கே. ரங்கராஜன் பங்கேற்பு

31 May 2026, 9:35 pm
தோழர் கே.பாலதண்டாயுதம் 53 ஆவது  நினைவு தினம் கடைப்பிடிப்பு டி.கே. ரங்கராஜன் பங்கேற்பு
<p><strong>தோழர் கே.பாலதண்டாயுதம் 53 ஆவது நினைவு தினம் கடைப்பிடிப்பு டி.கே. ரங்கராஜன் பங்கேற்பு</strong></p><p>சென்னை, மே 31 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலை வர், தியாகச் செம்மல் தோழர் கே.பாலதண்டா யுதம் அவர்களின் 53 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. </p><p>சுதந்திரப் போராட்ட வீரர், நெல்லை சதி வழக்கில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு சிறைகளில் வாழ்ந்தவர்.</p><p>கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் நீண்ட காலம் தலைமறைவு வாழ்க்கை நடத்திய தோழர் பால தண்டாயுதம் நினைவேந்தல் நிகழ்வு சென்னை தியாக ராயா நகரில் உள்ள ‘பாலன் இல்லத்தில்’ நடைபெற்றது.</p><p> இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் மு.வீரபாண்டியன் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.</p><p> கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலை வரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழருமான முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், கே. பாலதண்டாயுதம் உருவப் படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். </p><p>உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் நிதிக் குழு செயலாளரும் அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான சி.எச்.வெங்கடாச்சலம் உள்ளிட்ட ஏராளமானோர் தோழர் கே. பாலதண்டாயுதம் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.