பத்திரிகையாளர்களா பயங்கரவாதிகளா?
9 Apr 2026, 5:30 am
<p><strong>பத்திரிகையாளர்களா பயங்கரவாதிகளா?</strong></p><p>விஜய்யின் பிரச்சாரப் பயணம் குறித்துப் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அளித்த பதில் வைரலாகி வருகிறது.</p><p>"விஜய் எங்கெல்லாம் வருவார்?" என்று கேட்டதற்கு, "போலீஸ் அனுமதி கொடுத்தால் சொல்வோம்" என்றார் ஆனந்த். "போலீஸ் அனுமதி கொடுத்து விட்டதே" என்று செய்தியாளர் கேட்க, "இதற்காகத்தான் பிசிஆர் மீட் கொடுப்பீங்களா?" என்று சத்தமாகப் பதிலளித்துள்ளார்.</p><p>கேள்விகளுக்குப் பதில் சொல்லத் துணிவில்லாதவர்கள், ஜனநாயகத்தின் நான்காவது தூணைத் தற்காத்துப் பார்ப்பது அவர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையை அப்பட்டமாக காட்டுகிறது!</p>
