பத்திரிகையாளர் பி.எஸ்.டி. புருசோத்தமன் படத்திறப்பு
23 Jul 2026, 9:34 pm
<p><strong>பத்திரிகையாளர் பி.எஸ்.டி. புருசோத்தமன் படத்திறப்பு</strong></p><p>நாகப்பட்டினம், ஜூலை 23 - நாகப்பட்டினம் மாவட்டம், பாங்கலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான மறைந்த பி.எஸ்.தனுஷ்கோடியின் மகனும், பத்திரிகையாளர் சங்கத்தின் (டியூஜெ) முன்னாள் தலைவருமான மறைந்த பி.எஸ்.டி. புருசோத்தமன் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மூத்த தலைவர் என்.சீனிவாசன் மறைந்த புருசோத்தமனின் படத்தைத் திறந்துவைத்துச் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.மாரிமுத்து, கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.லதா, திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.</p>
