முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

7 Jan 2026, 3:23 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்
<p><strong>பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்</strong></p> <p>அமெரிக்க அதிகாரிகளுடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்ய இந்தியாவின் வெளியுறவு அமைச்சருக்கு ஏன் ஒரு இடைத்தரகர் (லாபி நிறுவனம் ) தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. இது ஜெய்சங்கரை அடிப்படை வேலைகளைக்கூட செய்யத் தெரியாதவர் போலவும், மோடி அரசாங்கம் டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்து மிகக் குறைந்தபட்ச முடிவுகளை கூட &nbsp;எடுக்க முடியாத நிலையில் இருப்பதையும், மோடியின் இராஜதந்திரம் குறித்த உள்நாட்டு ஊடகங்களின் செய்திகள் விளம்பர நோக்கத்தில் அமைவதையுமே &nbsp;காட்டுகிறது.</p> <p><strong>சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ்</strong></p> <p>உலகளாவிய ஸ்திரமின்மைக்கு &nbsp;மூல காரணமே அமெரிக்கா தான் என &nbsp;பெரும்பாலான நாடுகள் பார்க்கின்றன. அப்படியிருக்க இந்தியா ஏன் மௌனமாக இருக்கிறது? இராக்கில் நடந்த அந்தப் பயங்கரத்தை நான் நேரில் கண்டேன். அல்-அமிரியா பதுங்குக்குழியில் இருந்த பொதுமக்கள் அமெரிக்கக் குண்டுகளால் உயிருடன் கருகிப்போனார்கள். சுதந்திர நாடுகளின் மீது பேரழிவுகளைத் திணிப்பது தடையின்றித் தொடர்கிறது.</p> <p><strong>காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா</strong></p> <p>இந்தியாவை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்த நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அமர்த்தியா சென், இப்போது இங்கு தனது வாக்காளர் தகுதியை நிரூபிக்க வேண்டியுள்ளது. உலக நாடுகள் அவரை &nbsp;அழைத்துக்கொள்ள முயன்ற போதும் &nbsp;இந்தியக் குடியுரிமையை பெருமையுடன் தக்கவைத்துக்கொண்ட 92 வயதுடைய ஒரு மாமனிதரைத் துன்புறுத்திய ஞானேஷ் குமாருக்கும் அவரது அமைப்புக்கும் வாழ்த்துகள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram