பொறுப்பேற்பு
25 Jun 2026, 12:39 am
<p><strong>பொறுப்பேற்பு</strong> </p><p>சேலம், ஜூன் 24- சேலம் மாநகர காவல் ஆணையாளராக ஜோஷி நிர்மல் குமார் பொறுப் பேற்றுக் கொண்டார். சேலம் மாநகர காவல் ஆணையராக பொறுப்பு வகித்த அனில் குமார் கிரி, பணியிடம் மாற்றம் செய்யப் பட்டார். இதையடுத்து சென்னை பெருநகர தலைமை யகத்தில் பணிபுரிந்த ஜோதி நிர்மல் குமார், சேலம் மாந கரின் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதைய டுத்து அவர் புதனன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் பின் அவர் கூறுகையில், சேலம் மாநகரில் சமூக விரோத செயல்களில் ஈடுபவர்களை கண்டுபிடித்து, கைது செய்து, குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்க அனைத்து முயற்சி களையும் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை செயல்களை முழுமை யாக தடுத்து, மக்களை அமைதியாக மகிழ்வுடன் வாழ முழு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.</p>
