வந்தே மாதரம் பாடல் அவமதிப்புக்கு தண்டனை தொடர்பான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜான் பிரிட்டாஸ் எம்.பி நோட்டீஸ்!
20 Jul 2026, 3:05 pm
<p>வந்தே மாதரம் பாடலுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் 'தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026'-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதை எதிர்த்து, சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் விதி 67-இன் கீழ் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில், 'தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026'-ஐ, அறிமுகம் செய்து, நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மசோதாவை எதிர்த்து சிபிஎம் எம்.பி ஜான் பிரிட்டாஸ் விதி 67-இன் கீழ் நோட்டீஸ் ஒன்றைத் தாக்கல் செய்தார்.</p><p>அந்த நோட்டீஸில், தேசியப் பாடல் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படை நோக்கத்திற்கு இந்த மசோதா முரணானது என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p><br></p>
