‘ஜி ராம் ஜி’ சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்! விவசாயத் தொழிலாளர்கள் தர்ணா!
28 Feb 2026, 2:29 pm
<p><strong>‘ஜி ராம் ஜி’ சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்! விவசாயத் தொழிலாளர்கள் தர்ணா!</strong></p>
<p>சென்னை, பிப். 28 - அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தினர், தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் முழக்கப் போராட்டத் தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜக அரசானது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதிச் சட்டத்தை மீண்டும் செயல்படுத்திட வேண்டும்; ‘விபி ஜி ராம் ஜி’ சட்டத் தைத் திரும்பப் பெற வேண்டும்; வேலை நாட்களை 200 நாட்களாகவும், தினக் கூலியை 700 ரூபாயாகவும் உயர்த்திட வேண்டும். நிதி ஒதுக்கீட்டை 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமையன்று (பிப்.25) நடைபெற்ற இந்தப் போராட் டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். அகில இந்தியத் துணைத்தலைவர் ஏ. லாசர் சிவகங்கையிலும், மாநிலத் தலைவர் மா. சின்னதுரை எம்எல்ஏ திரு வாரூரிலும், பொதுச்செயலாளர் வீ. அமிர்தலிங்கம் தேனியிலும், பொருளா ளர் அ. பழநிசாமி பெரம்பலூரிலும், மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் தஞ்சாவூரிலும், மத்திய செயற்குழு உறுப்பினர் எஸ். பூங்கோதை விருது நகரிலும் போராட்டங்களில் கலந்து கொண்டனர். ஊரக வேலைக்கான சட்ட அந்தஸ்துடன் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஊரக வேலைச் சட்டத்தை 2025 டிசம்பர் 17 நள்ளிர வில் ஒழித்துக் கட்டிவிட்டு, திடீரென ‘விபி ஜி ராம் ஜி’ எனும் புதிய வேலை உத்தரவாதமற்ற திட்டத்தை நிறை வேற்றியிருப்பதை ஏற்க முடியாது. அதனை மோடி அரசு திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்று தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.</p>
