வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ஜார்க்கண்ட் பெப்கோ ஆலைத் தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட ரவுடியிசம்: உழைப்புச் சுரண்டலைத் தட்டிக்கேட்டதற்காகத் தடியடி மற்றும் பணிநீக்கம்!
9 May 2026, 9:45 pm
<p><strong>வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ஜார்க்கண்ட் பெப்கோ ஆலைத் தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட ரவுடியிசம்: </strong></p><p><strong>உழைப்புச் சுரண்டலைத் தட்டிக்கேட்டதற்காகத் தடியடி மற்றும் பணிநீக்கம்!</strong></p><p><strong>வேலைநிறுத்தம் 6</strong></p><p>ஜாம்ஷெட்பூர், மே 9- வடஇந்தியத் தொழிலாளர் வர்க்கம் சந்தித்து வரும் எழுச்சி மற்றும் அடக்குமுறைகளின் வரிசையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் தொழில்துறை மையமான ஆதித்யபூர் - கம்ஹாரியா பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான தாக்குதல் உழைக்கும் வர்க்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. </p><p>கார்ப்பரேட் நிர்வாகங்கள் தங்களின் லாபத்திற்காகத் தொழிலாளர் சட்டங்களை காலில் போட்டு மிதிப்பதோடு மட்டுமல்லாமல், அடியாட்களைக் கொண்டு தொழிலாளர்களை ஒடுக்கும் போக்கையும் கையில் எடுத்துள்ளன. </p><p> ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேலா-கர்சவான் மாவட்டத்தில் உள்ள கம்ஹாரியா தொழில் பேட்டையில் இயங்கி வரும் ‘பாரத் இன்ஜினியரிங் அண்ட் பாடி பில்டிங்’ (BEBBCO) தனியார் நிறுவனத்தின் வாயிலில், கடந்த பிப்ரவரி 27 அன்று தொழிலாளர்கள் ஒரு பெரும் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினர்.</p><p> 20 முதல் 25 ஆண்டுகள் வரை அதே நிறுவனத்தில் ‘விசுவாசமாக’ உழைத்த 56 தொழிலாளர்களை நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்புமின்றிப் பணிநீக்கம் செய்தது இப்போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது.</p><p> சுரண்டலுக்கு எதிரான குரலும் நிர்வாகத்தின் அராஜகமும் பணிநீக்கம் செய்யப்பட்ட அந்தத் தொழிலாளர்கள் செய்த ஒரே ‘குற்றம்’, தங்களுக்குச் சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியம், இ.எஸ்.ஐ, பி.எஃப் மற்றும் போனஸ் போன்ற அடிப்படை உரிமைகளைக் கேட்டதுதான். </p><p>கடந்த பிப்ரவரி 25 அன்று இந்த உரிமைகளைத் தட்டிக்கேட்டதற்காக அவர்கள் பழிவாங்கப்பட்டனர்.</p><p> போராட்டம் நடைபெற்ற பிப்ரவரி 27 அன்று, நிர்வாகம் சுமார் 20-க்கும் மேற்பட்ட கூலிப்படை அடியாட்களை (Bouncers) ஏவி, போராடிய தொழிலாளர்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியது. </p><p>இரும்புத் தண்டுகள் மற்றும் தடிகளால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஐந்து தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். </p><p>ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜாம்ஷெட்பூர் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>தங்களின் உரிமைகளுக்காக அமைதியான முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது இத்தகைய வன்முறையைப் பிரயோகித்தது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. </p><p>எழுச்சியுற்ற ஆதரவும் போராட்டங்களும் இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு எதிராக ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா (JLKM) என்ற புதிய அரசியல் இயக்கம் களமிறங்கியது. </p><p>அந்த இயக்கத்தின் மத்திய தலைவர் பிரேம் மார்டி நேரில் சென்று காயமடைந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், மாவட்ட துணை ஆட்சியரிடம் மனுவும் அளித்தார். </p><p>நிர்வாகத்தின் இந்த ரவுடியிசத்தைக் கண்டித்து ஆதித்யபூர் மற்றும் கம்ஹாரியா பகுதிகளில் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு ‘மஷால் ஜுலூஸ்’ எனப்படும் தீப்பந்தப் பேரணிகளை நடத்தினர்.</p><p> ஆதித்யபூர் ‘பெல்ட்’: ஒப்பந்தத் தொழிலாளர் அவலம் ஜாம்ஷெட்பூரின் டாடா ஸ்டீல் போன்ற பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள் மற்றும் வாகன உடற்பகுதிகளைத் தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் கம்ஹாரியா பகுதியில் உள்ளன. </p><p>டாடா போன்ற பெரிய ஆலைகளில் ஓரளவுக்குத் தொழிற்சங்க உரிமைகள் இருந்தாலும், இந்தப் பகுதியில் உள்ள பெப்கோ போன்ற ஆலைகளில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையே ஆதிக்கம் செலுத்துகிறது.</p><p> சுமார் 100 நிரந்தரப் பணியாளர்கள் மட்டுமே உள்ள பெப்கோ நிறுவனத்தில், 500 முதல் 1,000 பேர் வரை ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சுரண்டப்படுகின்றனர். </p><p>இவர்கள் எவ்வித தொழிற்சங்க பாதுகாப்பும் இன்றி, குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் உழைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.</p><p> பிப்ரவரி 12 அன்று நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தின் தாக்கம் இந்தப் போராட்டங்களிலும் எதிரொலித்தது. </p><p>தொடரும் போராட்டம் இந்தத் தாக்குதலுக்குப் பிறகு நிர்வாகம் சில தற்காலிகச் சமரச முயற்சிகளில் ஈடுபட்டாலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான முழுமையான நீதி இன்னும் கிடைக்கவில்லை. </p><p>முறையான தொழிற்சங்கங்கள் இல்லாத இத்தகைய சிறு தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து இத்தகைய கிளர்ச்சிகளை முன்னெடுப்பது வடஇந்தியாவில் அதிகரித்து வரும் புதிய போக்கைக் காட்டுகிறது. </p><p>பெப்கோ ஆலைத் தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட வன்முறை என்பது ஒரு தனிப்பட்ட தொழிற்சாலைப் பிரச்சனை அல்ல; இது ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் மீது கார்ப்பரேட் - ரவுடி கூட்டணி நடத்தும் தாக்குதலாகும். </p><p>இத்தகைய அடக்குமுறைகளை மீறி தொழிலாளர்கள் காட்டும் உறுதி, அவர்களின் வர்க்கப் போராட்டக் குணத்தைப் பறைசாற்றுகிறது. </p><p>(லெப்ட் வியூஸ்)</p>
