முந்தய பக்கம்

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு தில்லி மாணவர் முதலிடம்

1 Jun 2026, 9:26 pm
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு தில்லி மாணவர் முதலிடம்
<p><strong>ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு தில்லி மாணவர் முதலிடம்</strong> </p><p>ஜேஇஇ அட்வான்ஸ்டு என்பது நாட்டில் உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) சேருவதற்காக நடத்தப்படும் மிக உயரிய, கடினமான நுழைவுத் தேர்வாகும்.</p><p>2026ஆம் ஆண்டு க்கான ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு மே 17 அன்று நடைபெற்றது. மொத்தம் 1,79,694 தேர்வர்கள் பங்கேற்றனர். </p><p>இந்நிலையில், இந்த ஜேஇஇ அட்வா ன்ஸ்டு தேர்வு முடிவு ஞாயிறன்று இரவு ஐஐடி ரூர்க்கி (தேர்வை நடத்திய மண்ட லம்) வெளியிட்டது. </p><p>இதில் ஐஐடி தில்லி மண்டலத்தைச் சேர்ந்த சுபம் குமார் 360-க்கு 330 மதிப்பெண்கள் பெற்று பொது ரேங்க் பட்டியலில் முதலிடம் பிடித் துள்ளார். </p><p>அதே ஐஐடி தில்லி மண்ட லத்தைச் சேர்ந்த ஆரோஹி தேஷ் பாண்டே 280 மதிப்பெண்களுடன் பொது ரேங்க் பட்டியலில் 77ஆவது இடத்தைப் பிடித்து மாணவிகள் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram