மேகதாது அணை பிரச்சனை: அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
7 Jun 2026, 12:23 am
<p><strong>மேகதாது அணை பிரச்சனை: அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட ஜவாஹிருல்லா வலியுறுத்தல்</strong></p><p>மேகதாது அணை பிரச்சனை: அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட ஜவாஹிருல்லா வலியுறுத்தல் தருமபுரி, ஜூன் 5- மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்டும் பிரச்சனை தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட் டத்தை கூட்ட தமிழக அரசு முன்வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எச்.எம்.ஜவாஹி ருல்லா வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் தருமபுரி யில் வெள்ளியன்று செய்தியாளர்க ளிடம் கூறுகையில், மேகதாது அணைகட்டு கட்டுவது தொடர்பான பிரச்சனையில், தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். </p><p>தமிழ்நாடு அரசு மேக தாது அணை கட்டும் நடவடிக் கையை தடுத்து, பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும். </p><p>சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் மூலம் மனி தனின் எதிர்காலத்தை பாதுகாக்க லாம். இந்தாண்டு இந்தியாவில் அதிகளவு வெயில் பதிவாகியுள் ளது. </p><p>சுற்றுசூழலை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை மட்டும் அல்ல; ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும். </p><p>ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ‘விபிஜி ராம்ஜி’ என பெயர் மாற்றம் செய் துள்ளது. 1</p><p>00 நாள் வேலையை, 120 நாட்களாக உயர்த்துவோம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது</p><p>. ஆனால், இத்திட்டத்திற்கான நிதி யையே குறைத்துள்ளது. </p><p>கடந்த 2023-24 ஆம் ஆண்டில் 12695 கோடி ரூபாய், 2024-25 ஆம் ஆண்டில் 10156 கோடி ரூபாய், 2025-26 ஆம் ஆண்டில் 5828 கோடி ரூபாய் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. நடப் பாண்டில் (2026-27) 3923 கோடி ரூபா யாக குறைக்கப்பட்டுள்ளது. </p><p>அகில இந்திய அளவில் கடந்த 3 ஆண்டுக ளில் நூறு நாள் வேலைத் திட்டத் திற்கு 69 விழுக்காடு நிதி குறைக்கப் பட்டுள்ளது. </p><p>நூறு நாள் வேலைத் திட்டம் கிராமப்புற மக்களின் வாழ் வாதாரத்திற்கு உதவியது; பெண்க ளின் வளர்ச்சிக்கு உதவியது. </p><p> எனவே, நூறு நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தேவை யான நிதியை தமிழ்நாடு அரசு பெற்றுத்தர வேண்டும். </p><p>தமிழ்நாட்டில் தவெக அரசு தேர் தல் கால வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும். குறிப்பாக, மக ளிர் உதவித்தொகை உயர்வு, தாய் மாமன் சீர் போன்றவற்றை வழங்க வேண்டும். </p><p>மேலும், தருமபுரி மாவட்டம், பி.துரிஞ்சப்பட்டியில் அரசு மதுபானக்கடை வழிபாட்டு தலம், அரசுப்பள்ளி என பொது மக்கள் கூடும் இடத்தில் அமைந் துள்ளது. </p><p>பெண்கள், மாணவிகளை அச்சுறுத்தும் விதமாக உள்ள இந்த கடையை அகற்ற மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இந்நிகழ்வில், அக்கட்சி யின் மாவட்டத் தலைவர் என்.சுபே தார், நிர்வாகிகள் பைரோஸ், சாதிக் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.</p>
