தீக்கதிர் முக்கிய செய்திகள்
22 Jul 2026, 8:40 pm
<p><strong>தீக்கதிர் முக்கிய செய்திகள்</strong></p><p><strong>திரைக்கலைஞர் அபிராமி</strong></p><p>ஜந்தர் மந்தரில் நடப்பதைப் பற்றி என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. பல வருடங்கள் படித்து ஏமாற்றப்பட்ட இளைஞர்களின் குரலுக்கு தடியடியே பதிலாக கிடைத்துள்ளது. ஒருவேளை அது என் குழந்தையாக இருந்தால்? உள்ளூரில் நடக்கும் போராட்டங்களில் கலந்துகொள்ளுங்கள். </p><p><strong>பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்</strong></p><p>கூடுதல் படைகளைக் குவிப்பது மட்டுமே மோடி அரசின் ஒரே பதிலாக இருப்பதாகத் தெரிகிறது. அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்குவது என்ற ஒரு எளிய செயல் , மாணவர்களுக்கு உறுதியளிப்பதற்கும் கோபத்தைத் தணிப்பதற்கும் பெரிதும் உதவும்.</p><p><strong>ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்ற மாணவி</strong></p><p>முதன்முதலாக போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். கண்ணீர் புகைக்குண்டு எங்களின் மீது வீசப்பட்டது. லத்தியால் தாக்கினர். எனினும் நாங்கள் வீடுகளுக்கு ஓடிவிடவில்லை. இங்குதான் இருக்கிறோம். மாற்றமே தீர்வு என நம்புகிறோம். எனவே மீண்டும் போராடுகிறோம்.</p><p><strong>பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்</strong></p><p>மாணவர்கள் தாக்கப்பட்டோ அல்லது இழுத்துச் செல்லப்பட்டோ உள்ள வீடியோக்களை சுட்டிக்கட்டியபோது, அவற்றைப் பார்க்க தனக்கு நேரமில்லை என்று நீதிமன்றம் கூறுகிறது. இது நம் நீதித்துறை எதற்கு முன்னுரிமை அளிக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.</p>
