தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி இந்தியாவிற்கு வர தயக்கம் காட்டும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு

25 Nov 2025, 3:29 pm
தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி இந்தியாவிற்கு வர தயக்கம் காட்டும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
<p><strong>தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி இந்தியாவிற்கு வர தயக்கம் காட்டும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு</strong></p> <p>இஸ்ரேல் பிரதமரும், பிரதமர் மோடி யின் நெருங்கிய நண்பருமான பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் &nbsp;ஒருமுறை இந்திய பயணத்தை ஒத்தி &nbsp;வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளது. &nbsp;இந்த வருட இறுதியில் இந்தியாவில் &nbsp;சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்க பெஞ்சமின் நேதன் யாகு திட்டமிட்டிருந்தார். இந்த சந்திப்பின் &nbsp;போது வெப்பமயமாதல் உள்ளிட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என இஸ்ரேல் &nbsp;அமைச்சகம் அறிவித்து இருந்தது. &nbsp;ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த தில்லி &nbsp;குண்டு வெடிப்புக்குப் பிறகு, பாதுகாப்பு அச்சம் காரணமாக நேதன்யாகு இந்திய &nbsp;சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்துள்ள தாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்மூலம் 2025ஆம் &nbsp;ஆண்டு நேதன்யாகு தனது இந்திய பய ணத்தை ரத்து செய்வது இது மூன்றாவது &nbsp;முறையாகும். முன்னதாக ஏப்ரல், செப்டம் &nbsp;பர் மாதங்களில் நேதன்யாகு இந்திய &nbsp;சுற்றுப் பயணத்தை ரத்து செய்து இருந் &nbsp;தார். தில்லி குண்டுவெடிப்பு அச்சம் கார ணமாக இந்தியாவின் பாதுகாப்பு கட்ட மைப்பில் நம்பிக்கை இல்லை என்பதை தனது பயண ஒத்திவைப்பு நடவடிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் இஸ்ரேல் &nbsp;பிரதமர் நேதன்யாகு.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.