இஸ்ரேல் ராணுவம் மீண்டும் அட்டூழியம் தெற்கு லெபனானில்குழந்தைகள் உட்பட 11 பேர் பலி
16 Aug 2026, 9:41 pm
<p><strong>இஸ்ரேல் ராணுவம் மீண்டும் அட்டூழியம் தெற்கு லெபனானில்குழந்தைகள் உட்பட 11 பேர் பலி</strong></p><p>அன்சார், ஆக 16-தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.</p><p>கடந்த ஜூன் 20ஆம் தேதி இஸ்ரேல் - லெபனான் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனாலும் இஸ்ரேல் ராணுவம் இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.</p><p>இந்நிலையில், சனியன்று லெபனானின் தெற்கு பகுதியின் அன்சார் நகரின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் திடீரென வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனை லெபனான் நாட்டின் பிரதமர் நவாப் சலாம் உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் கூறுகையில்,”தலைநகர் பெய்ரூட்டிலிருந்து தெற்கே 73 கி.மீ தொலைவில் உள்ள அன்சார் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் 3 குழந்தைகளும், 2 பெண்களும் அடங்குவர். இஸ்ரேல் இந்த வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். இது நல்லதல்ல. எங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பும், அவர்களின் சொந்த நிலத்தில் வாழ்வதற்கான உரிமையும் விட்டுக் கொடுதலுக்கும் உட்பட்டவை அல்ல” என கண்டனம் தெரிவித்தார்.</p>
