தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடா?: குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு

9 Nov 2025, 2:37 pm
ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடா?: குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு
<p><strong>ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடா?: குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு</strong></p> <p>சென்னை, நவ.9 - ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை &nbsp;அமைச்சர் சக்கரபாணி பதிலளித்து உள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக் கையில், எடப்பாடி பழனிசாமி 12,573 &nbsp;கடைகளில் கோதுமை இல்லை என்று கூறியிருப்பதாகக் குறிப்பிட்டு உள்ளார். ஒன்றிய அரசிடம் தமிழ்நாட் டிற்கு அதிக அளவில் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். &nbsp;ஜனவரி 2024 முதல் செப்டம்பர் &nbsp;2024 வரை மாதம் 8,576 மெட்ரிக் &nbsp;டன் மட்டுமே ஒன்றிய அரசால் வழங் கப்பட்டு வந்ததாகவும், தற்போது மார்ச் 2025 முதல் கோதுமை ஒதுக் கீடு பழைய அளவிற்கே குறைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நவம்பர் 2025 மாதத்திற்கு 8,722 &nbsp;மெட்ரிக் டன் கோதுமை மாவட்டங் களுக்கு நுகர்வின் அடிப்படையில் உப ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களில் கோதுமை யின் நுகர்வு சதவீதம் சராசரியாக &nbsp;92 சதவீதம் என பதிவாகியுள்ளதாக வும், நவம்பர் 8 வரை 63 சதவீதம், அதா வது 5,386 மெட்ரிக் டன் கோதுமை நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு &nbsp;செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறி னார். நவம்பர் 15-க்குள் 100 சதவீத கோதுமையும் நியாய விலைக் கடை களுக்கு நகர்வு செய்யப்பட்டு வழக்கம் &nbsp;போல் பொதுமக்களுக்கு தங்குதடை யின்றி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றிலும் அரசியல் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக் &nbsp;கொண்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.