தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தோல்வியின் விளிம்பில் பின்வாங்கிய டொனால்டு டிரம்ப்

9 Apr 2026, 5:30 am
ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தோல்வியின் விளிம்பில் பின்வாங்கிய டொனால்டு டிரம்ப்
<p><strong>ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தோல்வியின் விளிம்பில் பின்வாங்கிய டொனால்டு டிரம்ப்</strong></p><p>மேற்கு ஆசியாவில் கடந்த ஐந்து வாரங்களாக நீடித்து வந்த உக்ரமான போர், ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை எட்டியுள்ளது. ஈரான் மீதான தனது மிரட்டல்கள் பலனளிக்காத நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p>ஈரானின் உறுதி, சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் அழுத்தம் ஆகியவற்றிற்கு முன்னால் டிரம்ப் பணிந்துள்ளதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. அழிப்போம் என மிரட்டலும் தடையும் பின்வாங்கலும் என டிரம்ப் செயல்பட்டுள்ளார்.</p><p>செவ்வாய்க்கிழமை காலைக்குள், ஈரான் முழுமையாக அழிக்கப்படும் என்று டிரம்ப் கடும் மிரட்டல் விடுத்திருந்தார். &#39;ஹோர்மஸ் நீர்ச்சந்தியை ஈரான் உடனடியாகத் திறக்காவிட்டால், இன்று இரவு ஒரு முழு நாகரிகமே முடியும்&#39; என்று அவர் வெளியிட்ட மிரட்டல் உலகையே உலுக்கியது.</p><p>ஒரு நாட்டின் ஜனாதிபதி, பல ஆயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட ஒரு தேசத்தையே அழிப்பேன் என்று பகிரங்கமாக போர்க்குற்றங்களுக்கு அழைப்பு விடுத்தது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும், இந்த &#39;கெடு&#39; முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, டிரம்ப் தனது தர்க்கத்தையே மாற்றிக் கொண்டு ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.