உலக மகளிர் தின இலக்கியச் சந்திப்பு
1 Mar 2026, 5:56 pm
<p><strong>உலக மகளிர் தின இலக்கியச் சந்திப்பு</strong></p>
<p>கோவை, மார்ச் 1- தமுஎகச சார்பில், உலக மகளிர் தின சிறப்பு இலக்கியச் சந்திப்பு மற்றும் கவியரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் சார்பில், உலக மகளிர் தின சிறப்பு இலக்கியச் சந்திப்பு மற்றும் கவியரங்கம், கோவை தாமஸ் கிளப்பில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆ.கலைவாணி தலைமை வகித்தார். பு.காயத்ரி வரவேற்றார். முன்னதாக, மறைந்த கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, எழுத்தாளர் நான்சி கோமகன் ‘மையிருளி’ நாவலை அறி முகப்படுத்தி பேசினார். எழுத்தாளர் கி.அமுதா செல்வி ஏற் புரையாற்றினார். இதைத்தொடர்ந்து “பெண்கள் தனித்து முடி வெடுக்கும் இடத்தை எங்கு எட்டியிருக்கிறார்கள்? வீட்டிலா? பணியாற்றும் இடத்திலா? பொது வாழ்விலா?” என்ற தலைப் பில் வழக்கறிஞர் தேன்மொழி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் கவிஞர் பிரியா சந்திரன், முனைவர் வெ.மைதிலி மற்றும் கவிஞர் சுடர் விழி ஆகியோர் பங்கேற்று வாதிட்டனர். மற்றொரு நிகழ்வாக கவிஞர் சண்முக தேவி தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் ஏராளமான பெண் கள், கவிதைகள் வாசித்தனர். இந்நிகழ்வில், தமுஎகச மாவட் டத் தலைவர் மு.காளிநாதன், செயலாளர் அ.கரீம், துணைத் தலைவர் தி.மணி, நிர்வாகி தங்க முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ராகப்பிரியா நன்றி கூறி னார்.</p>
