முந்தய பக்கம்

ஓய்வுக்கால பணிக்கொடை வழங்க வலியுறுத்தல்

22 Feb 2026, 3:26 pm
ஓய்வுக்கால பணிக்கொடை  வழங்க வலியுறுத்தல்
<p><strong>ஓய்வுக்கால பணிக்கொடை&nbsp; வழங்க வலியுறுத்தல்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, பிப்.22- &nbsp;தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய ஒய்வு பெற்ற அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று திருச்சியில் நடைபெற்றது. &nbsp;கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் நாகலிங்கம் தலைமை வகித்தார். மாநில தலைமையிட செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சேரலாதன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள கமுட்டேஷன் பெண்டிங்-ஐ அரசு உடனே வழங்க வேண்டும். இறப்பு மற்றும் ஓய்வு கால பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. &nbsp;சென்னை மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், சென்னை மண்டலச் செயலாளர் சந்திரசேகரன், திருச்சி மண்டலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் சுந்தரம் நன்றி கூறினார்.</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram