கல்லாபுரம் பகுதியில் கிரந்த எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டு
30 Mar 2026, 3:40 pm
<p><strong>கல்லாபுரம் பகுதியில் கிரந்த எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டு</strong></p>
<p>உடுமலை, மார்ச் 30 - உடுமலை கல்லாபுரம் பகுதியில் கிரந்த எழுத்துக்களுடன் கூடிய கல் வெட்டு கண்டறியப்பட்டுள்ளது என உடு மலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில் மலைகளினூடே அமைந்தி ருக்கும் ஊரே கல்லாபுரம். இங்கு ஐயா யிரம் ஆண்டு காலத்திற்கும் முற்பட்ட மனிதக்குழுக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் சான்றுகளாக பாறை ஓவி யங்கள் இருக்கின்றன. அதேபோல் சங்க இலக்கியப்பாடல்களிலும் கல்லா மலர் குறித்தும், அயிரை தெய்வத்தை வழிபட்டமைக்கான பதிற்றுப்பத்து பாடல்களும் சான்றாக உள்ளன. அதே போல் மூவாயிரம் ஆண்டு காலத்திற்கும் முற்பட்ட மனிதர்கள் வசித்தமைக்கான கற்திட்டைகளும் அமராவதி ஆற்றின் நதிக்கரையில் இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக கி.பி.8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு முடிய சேர, சோழ, பாண்டியர் கால ஆட்சியில் இங்கு விக்கி ரம சோழன், வீரராசேந்திரன் போன்ற சிற் றரசர்கள் ஆட்சி செய்தமைக்கான கல் வெட்டுகளும் கிடைத்துள்ளன. தற் போது கல்லாபுரத்திற்கும் மணல் மேட் டிற்கும் இடையே உள்ள மண்டபத் துறை பகுதியில் 25க்கும் மேற்பட்ட கல் தூண்கள் சிதிலமடைந்து கிடக்கின் றன. இது கோயில் மண்டபத்திற்கா கவோ, அல்லது படித்துறை மண்டபத் திற்காகவோ அமைக்கப்பட்டிருக்க லாம். எட்டடி உயரமும், எண்கோண சதுர அளவில் ஒரே அமைப்பில் வெட் டப்பட்ட கற்தூண்களாக இருக்கின்றன. இந்தக் கல்தூணில் இரண்டு வரிகள் சிதி லமடைந்த கல்வெட்டு எழுத்துகள் உள் ளது. இதில் நிலத்தின் எல்லைகளை குறிக்கும் கல்வெட்டாகவும், கொடை அளிக்கப்பட்ட நிலத்தின் எல்லைகளை குறிக்கப்பட்ட கல்வெட்டு எழுத்துகளா கவும், நிலத்தின் வடக்குப் பகுதி குறிக் கையில் அதன் தெற்கு எல்லையை குறிப்பிடுகிறது. இந்த நான்கு எல்லைக ளுக்குட்பட்ட நிலம் என்று கல்வெட்டு நீண்டு செல்லும் பகுதியாக இருக்கிறது. முழுமையான கல்வெட்டு கிடைக்கப் பெறவில்லை. இதில் வரும் ‘த்ர’ எழுத்து கிரந்த எழுத்து வடிவத்தை ஒத் திருப்பதாக தொல்லியல் ஆய்வ றிஞர் மூர்த்தீஸ்வரி தெரிவித்தார். மேலும், இதற்கு அருகில் அரை அடி ஆழமுள்ள பாறைக்குழிகளும் இருக் கின்றது. அமராவதி நதியின் கரையில் மனித சமூகம் வாழ்ந்தமைக்கான சான்றுகளாக இதனைக் கருத்தில் கொள்ளலாம். குமரலிங்கம் கரி வரத ராஜ பெருமாள் கோயிலில் கல்லாபுரம் பகுதியில் நிலங்களை அளப்பதற்கா கவே அளவுகோல் கண்டெடுக்கப்பட்ட தையும் இவ்விடத்தில் நாம் நினைவு கூற லாம். கடத்தூர் மருதீசர் கோயில் கல்தூண் ஒன்றை கல்லாபுரத்தில் சொக்கி என்பவர் செய்து கொடுத்த மைக்கான கல்வெட்டு இருப்பதையும் நாம் இவ்விடத்தில் நினைவு கூற வேண்டும். இந்தப் பாறைக்குழிக்கு அரு கில் வசிக்கும் மக்களிடம் இது குறித்து விசாரித்தபோது இந்த மரத்தின் கீழ் வழிபாடு இருந்ததாகவும், காலப்போக் கில் இந்த கற்தூண்கள் சிதிலமடைந்த தால் அந்த வழிபாடும் மறக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். கல்லாபுரம் பகுதியில் கொடைவள் ளல் குமணன் வரலாற்றுக்காக உடு மலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த் தீஸ்வரி, பல்லடம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் பட்ட ஆய்வளர் ஜெய்சிங், வி.கே.சிவகுமார், வீரய்யன், மற்றும் அருட்செல்வன் ஆகியோர் தொடர்ந்து கள ஆய்வு செய்து வரு கின்றனர்.</p>
