தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வந்தவாசியில்‌ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌ திமுக வேட்பாளர்‌ எஸ்‌. அம்பேத்குமார்‌ வாக்குறுதி

10 Apr 2026, 5:30 am
வந்தவாசியில்‌ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌ திமுக வேட்பாளர்‌ எஸ்‌. அம்பேத்குமார்‌ வாக்குறுதி
<p><strong>வந்தவாசியில்‌ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌ திமுக வேட்பாளர்‌ எஸ்‌. அம்பேத்குமார்‌ வாக்குறுதி</strong></p><p>திருவண்ணாமலை, ஏப்‌. 9- திருவண்ணாமலை மாவட்டம்‌, வந்தவாசி சட்டமன்றத்‌ தொகுதியில்‌ மதச்சார்பற்ற முற்போக்குக்‌ கூட்டணி சார்பில்‌ போட்டியிடும்‌ திமுக வேட்பாளர்‌ எஸ்‌. அம்பேத்குமார்‌, இன்று வந்தவாசி நகரின்‌ பல்வேறு பகுதிகளில்‌ தீவிர வாக்கு சேகரிப்பில்‌ ஈடுபட்டார்‌.</p><p>வந்தவாசி நகரம்‌, ஆரணி சாலை, காஞ்சீபுரம்‌ சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில்‌ உதயசூரியன்‌ சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அவருக்கு, வழி நெடுகிலும்‌ பொதுமக்கள்‌ பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்‌.</p><p>இந்தப்‌ பிரச்சாரத்தின்‌ போது பேசிய அம்பேத்குமார்‌, “வந்தவாசி மக்களின்‌ நீண்ட கால கோரிக்கையான புதிய தொழிற்பேட்டை அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌” என உறுதி அளித்தார்‌.</p><p>இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில்‌ திமுக நகரச்‌ செயலாளர்‌ ஏ. தயாளன்‌, நகர மன்றத்‌ தலைவர்‌ எச்‌. ஜலால்‌ மற்றும்‌ கூட்டணிக்‌ கட்சி நிர்வாகிகள்‌, தொண்டர்கள்‌ எனப்‌ பெருந்திரளானோர்‌ கலந்து கொண்டனர்‌.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.