தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2ஆவது நாளாக ஆட்டம் கண்ட இந்திய பங்குச்சந்தைகள்

8 May 2026, 9:34 pm
2ஆவது நாளாக ஆட்டம் கண்ட இந்திய பங்குச்சந்தைகள்
<p><strong>2ஆவது நாளாக ஆட்டம் கண்ட இந்திய பங்குச்சந்தைகள்</strong></p><p>மும்பை மேற்கு ஆசியாவில் அதி கரித்து வரும் பதற் றங்கள், எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத் தும் போன்ற அச்சங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை யால் இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை 2ஆவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன. </p><p>மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் (BSE Sensex) 516.33 புள்ளிகள் அல்லது 0.66 சதவீதம் சரிந்து 77,328.19 புள்ளிகளில் நிலைபெற்றது. </p><p>ர்த்தகத்தின் போது, இந்த குறியீடு சுமார் 700 புள்ளிகள் வரை சரிந்து, அன்றைய குறைந்தபட்ச அளவான 77,146.43 புள்ளிகளைத் தொட்டது. அ</p><p>தே போல தேசிய பங்குச் சந்தையின் நிப்டி (NSE Nifty) 150.50 புள்ளிகள் அல்லது 0.62 சதவீதம் சரிந்து 24,176.15 புள்ளிகளில் முடிவடைந்தது. வ</p><p>ங்கிப் பங்குகள் சரிவு வங்கி, நிதித்துறை பங்குகள் வெள்ளியன்று கடும் விற்பனை அழுத்தத்தை சந்தித்தன. </p><p>பாரத ஸ்டேட் வங்கி தனது மார்ச் காலா ண்டு வருவாய் முடிவுகளை அறிவித்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் 6.62 சதவீதம் சரிந்தன. </p><p>ஹெச்டிஎப்சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் மஹிந்திரா &amp; மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் கடுமையாக சரிந்தன. ரூ.340.89 கோடி ஆசிய சந்தைகள் வெள்ளிக்கிழ மை கலவையான போக்குடன் ஆட்டம் கண்டன. </p><p>தென் கொரியா வின் கோஸ்பி சற்று உயர்ந்து முடி வடைந்த நிலையில், ஜப்பானின் நிக்கேய், சீனாவின் ஷாங்காய் காம்போசிட், ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன. </p><p>குறிப்பாக ஐரோப்பிய சந்தைகளும் நஷ்டத் தில் வர்த்தகமாகின. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வியா ழக்கிழமை ரூ.340.89 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள தாக செய்திகள் வெளியாகி யுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.