ரயில்வேயில் ஆட்குறைப்பு - பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் முடிவுகள்!
7 May 2026, 11:51 pm
<p><strong>ரயில்வேயில் ஆட்குறைப்பு - பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் முடிவுகள்!</strong></p><p>இந்தியாவின் உயிர்நாடியாக விளங் கும் ரயில்வே துறை, தற்போது ஒன்றிய அரசின் தவறான நிர்வாக முடிவுகளால் நலிவடைந்து வருகிறது. </p><p>எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற் பது, பொதுத்துறை வங்கிகளை இணைப்பது என பொதுத்துறை நிறு வனங்களை ஒவ்வொன்றாக சீரழித்து வரும் ஒன்றிய மோடி அரசு, தற்போது ரயில்வே துறையை தனது இலக்காக மாற்றியுள்ளது. </p><p>நிர்வாகத் திறனை மேம்படுத்துவ தாகக் கூறி, ரயில்வே வாரியம் தனது மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 2 சதவீதத்தைக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. </p><p>இந்திய ரயில்வே யில் அங்கீகரிக்கப்பட்ட 14.80 லட்சம் பணியிடங்களில், இந்த 2 சதவீத நடவ டிக்கை மூலம் சுமார் 29,608 பணியி டங்கள் நிரந்தரமாக நீக்கப்படவுள்ளன. </p><p>பொதுப் போக்குவரத்து என்பது லாப நோக்கமற்ற ஒரு சேவைத்துறை என்பதை ஆட்சியாளர்கள் உணர மறுக் கிறார்கள். </p><p>கடந்த காலத்தில் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், தொழிலாளர்களின் உரிமை களைப் பறிக்காமல் இதே துறையை லாபகரமாக மாற்றிக் காட்டினார் என்பது வரலாறு. </p><p>ஆனால், தற்போதைய அரசு லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படுவது வேதனைக்குரியது.</p><p> நாட்டில் வேலையில்லா திண்டாட் டம் உச்சத்தில் இருக்கும் நிலையில், இருக்கும் வேலையையும் பறிக்கும் அரசின் செயல் இளைஞர்களை ஆவேச மடையச் செய்துள்ளது. </p><p>ஆண்டு ஆள் சேர்ப்பு காலண்டர் (Annual Recruit ment Calendar) என்ற பெயரில் கண்து டைப்பு நடவடிக்கைகளை அரசு மேற் கொள்கிறது. </p><p>2026-ஆம் ஆண்டு குரூப்-டி பிரிவில் வெறும் 22,000 பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p> ஆனால், ரயில் வேயில் தற்போது 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை காலிப் பணியிடங்கள் உள் ளன. </p><p>2025-26 நிதியாண்டில் லோகோ பைலட், டெக்னீசியன் என வெறும் 28,463 இடங்களே அறிவிக்கப்பட்டுள் ளன. </p><p>பெரும்பாலான பராமரிப்புப் பணி கள் வெளி முகமை (Outsourcing) முறைக்கு மாற்றப்படுவதால், நிரந்தரப் பணியிடங்கள் திட்டமிட்டு ஒழிக்கப்படு கின்றன. </p><p>பாதுகாப்பும் தொடரும் விபத்துகளும் ஊழியர் பற்றாக்குறை என்பது வெறும் வேலைவாய்ப்புப் பிரச்சினை மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான தாகும். </p><p>போதிய ஊழியர்கள் இல்லாத தால், லோகோ பைலட் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணி யாளர்களுக்கு அதீத வேலைப்பளு ஏற்படு கிறது. </p><p>கடந்த பத் தாண்டுகளில் மட்டும் இந்தியாவில் ரயில் விபத்துகளால் உயி ரிழந்தவர்களின் எண் ணிக்கை ஆயிரத்தைத் தாண்டுகிறது. </p><p>2016: இந்தூர் - பாட்னா விரைவு ரயில் விபத்தில் 150 பேர் பலி. </p><p>2017: கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் விபத்தில் 23 பேர் பலி. 2023: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். </p><p>2024 - 2026: பல்வேறு சிறிய மற்றும் நடுத் தர விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வரு கின்றன. </p><p>இந்த விபத்துகள் குறித்து நடத்தப் பட்ட ஆய்வுகளில், சிக்னல் குறைபாடு கள் மற்றும் ஊழியர்களின் கடும் மன உளைச்சல், ஓய்வில்லாத வேலை (Hu man Error due to fatigue) ஆகிய வையே முதன்மை காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p> ஊழியர் பற் றாக்குறையை நிவர்த்தி செய்யாமல் ஆட்குறைப்பு செய்வது, எதிர்காலத்தில் மேலும் பல விபத்துகளுக்கு வழிவகுக் கும் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின் றன. </p><p>ரயில்வேயை பாதுகாப்பானதாக வும், மக்கள் நலன் சார்ந்ததாகவும் மாற்ற வேண்டுமானால், காலிப் பணியிடங் களை உடனடியாகப் போர்க்கால அடிப் படையில் நிரப்ப வேண்டும்.</p><p> நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்ப டுத்தும் அதே வேளையில், அதை இயக்க தகுதியான மனித வளத்தை குறைப்பது தற்கொலைக்குச் சமமா னது.</p><p> லட்சக்கணக்கான இளைஞர்க ளின் கனவையும், கோடிக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பையும் ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். </p><p>இதன் அவசர, அவசியத்தை உணர்ந்தே தமிழகம் முழுவதும் இடது சாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடு கிறது. (ந.நி)</p>
