இந்தியாவில் நிலவும் தீவிர வெப்ப அலைக்கு காலநிலை மாற்றமே காரணம்
28 May 2026, 9:40 pm
<p><strong>இந்தியாவில் நிலவும் தீவிர வெப்ப அலைக்கு காலநிலை மாற்றமே காரணம்</strong></p><p>பெர்லின் இந்தியாவில் நிலவும் தீவிர வெப்ப அலைக்கு காலநிலை மாற்றமே காரணம் என ஐக்கிய நாடுகளின் சபை யின் காலநிலை மாற்ற தலைவர் சைமன் ஸ்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகை யில்,“காலநிலை மாற்றம் காரணமாக இந்தி யாவில் பெரும் பகுதிகளில் நீடித்து வரும் தீவிர வெப்ப அலை, மக்கள் மீதும் பொருளாதாரத்தின் மீதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. </p><p>குளிர்விக்கும் வசதிகள் இல்லாத மக்களும், நீண்ட நேரம் வெளியில் வெயிலில் வேலை செய்பவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>நீண்ட நாட்களாக நீடிக்கும் அதிக வெப்ப நிலை காரணமாக, இந்தியா முழுவதும் மின்சா ரத்திற்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மே 18 அன்று 257.3 கிகாவாட் ; மே 19 அன்று 260.4 கிகாவாட் ; மே 20 அன்று 265 கிகாவாட் ; மே 21 அன்று 270.8 கிகாவாட் அளவில் இந்தியாவின் மின்சார தேவை அதிகரித்துள்ளது.</p><p> இதில் மே 21 அன்று பயன்படுத்தப்பட்ட மின்சார அள வான 270.8 கிகாவாட் அளவு புதிய வரலாற்று அளவாகும். </p><p>இந்தியாவில் பகல் நேர மின் தேவையைப் பூர்த்தி செய்ய சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக் கத்தக்க ஆற்றல் வளங்கள் உதவியுள்ளன.</p><p> சூரிய மின்சக்தியை அதிகரிக்க இந்தியா எடுத் துள்ள தீவிர நடவடிக்கைகள் நல்ல பலனைத் தந்துள்ளன. </p><p>மேற்கு ஆசியாவில் நிலவும் மோ தல்கள் காரணமாக, புதைபடிவ எரிபொ ருட்களின் விலை, இறக்குமதி செய்யப்படும் ஆற்றலின் விலை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. </p><p>இத்தகைய சூழ்நிலையில் நிலவும் இந்த தீவிர வானிலை, மக்களின் வாழ்வாதாரத்திற் கும் வாழ்க்கைக்கும் ஒரு ‘இரட்டைச் சுமை யாக’ மாறியுள்ளது. </p><p>இந்த தீவிர வானிலை நிகழ்வுகள், உலகளவில் காலநிலை மாற்றத் தின் தாக்கங்களுக்கு ஏற்ப நம்மை (உலக மக்கள்) மாற்றியமைத்துக் கொள்வதற்கான நட வடிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்த்து கின்றன” என சைமன் ஸ்டீல் கவலை தெரி வித்துள்ளார்.</p>
