டாலர் சரிவும் பாஜகவின் வண்ணக்கனவும்!
yesterday
<p><strong>டாலர் சரிவும் பாஜகவின் வண்ணக்கனவும்!</strong></p><p>2025ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக உயர்ந்து, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தைப் பிடிக்கும் எனப் பிரதமர் மோடியும் பா.ஜ.க. அரசாங்கமும் இந்திய மக்களுக்கு வண்ணக்கனவுகளை வாரி வழங்கினர். </p><p>ஆனால், 2026 தரவுகளின்படி இந்தியா 3.92 டிரில்லியன் டாலருடன் 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.</p><p>கடந்த ஆண்டைவிட ரூபாய் மதிப்பில் ஜி.டி.பி. சற்று உயர்ந்திருந்தாலும், டாலர் கணக்கீட்டில் சரிவைச் சந்தித்துள்ளது. டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் வரலாறு காணாத அளவிற்கு 4.26% வீழ்ச்சியடைந்ததே இதற்குக் காரணம்.</p><p>அதேநேரம் யூரோ, யென் போன்ற நாணயங்கள் உயர்ந்துள்ளன. ரூபாயின் மதிப்பைக் காப்பாற்ற இயலாத மோடி அரசின் கையாலாகாத்தனமே இந்தச் சர்வதேசச் சரிவுக்குக் காரணம். மேலும், தனிநபர் சராசரி ஜி.டி.பி. வரிசையில் இந்தியா 150வது இடத்தில் மிக மோசமாக உள்ளது. </p><p>பொருளாதாரச் சிதைவிலிருந்து மீள வழிதெரியாமல், நெருக்கடியை ஒப்புக்கொள்ளவும் மறுக்கும் பா.ஜ.க., மக்களின் சிந்தனையை மடைமாற்ற மதவாதத்தை மட்டுமே ஆயுதமாக்குகிறது. அதற்குச் சங் பரிவார அமைப்புகளும் துணை நிற்கின்றன.</p>
