தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொதுமக்களை மிரட்டிய அஜித் பவார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை

25 Nov 2025, 3:29 pm
பொதுமக்களை மிரட்டிய அஜித் பவார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை
<p><strong>பொதுமக்களை மிரட்டிய அஜித் பவார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் &ldquo;இந்தியா&rdquo; கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை</strong></p> <p>மும்பை பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ் டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருக்கும் அஜித் பவார் (தேசி யவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்தவர்) கடந்த வாரம் பாரமதி தாலுகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர் &nbsp;தல் பிரச்சாரத்தின் போது, &nbsp;&rdquo;வாக்காளர்களே! நீங்கள் எங்க ளின் 18 வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்தால், நான் &nbsp;வாக்குறுதியளித்த அனைத்தை யும் நிறைவேற்ற &nbsp;தயாராக இருக் &nbsp;கிறேன். ஆனால் நீங்கள் எனது &nbsp;வேட்பாளர்களை நிராகரித் தால், நானும் உங்களை புறக்க ணிப்பேன். வாக்கு மட்டுமே உங் &nbsp;கள் கையில் உள்ளது. ஆனால் &nbsp;பணம் (நிதி) என் கையில் உள் ளது&rdquo; என பொதுமக்களை பகி ரங்கமாக மிரட்டினார். இந்நிலையில், உள்ளாட்சித் &nbsp;தேர்தல் நேரத்தில் வாக்கா ளர்களை பொது மேடையி லேயே மிரட்டிய அஜித் பவார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என &ldquo;இந்தியா&rdquo; கூட் &nbsp;டணிக் கட்சிகளான காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசிய வாத காங்கிரஸ் (சரத்) மற்றும் &nbsp;ராஜ் தாக்கரேயின் நவநிர்மாண் சேனா (&ldquo;இந்தியா&rdquo; கூட்டணி யில் அங்கம் வகிக்கவில்லை - ஆதரவு மட்டும்) கட்சியும் இந் திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக தேசிய வாத காங்கிரஸ் (சரத்) கட்சியின் &nbsp;தலைமை செய்தித் தொடர்பா ளர் மகேஷ் தபசே கூறுகையில், &rdquo;மகாராஷ்டிராவின் நிதி அமைச் &nbsp;சராக அஜித் பவார் இருந்தா லும், அது அவருடைய பணம் இல்லை. மக்களின் வரிப்பணம் ஆகும். ஆனால் அவர் ஆட்சி &nbsp;அதிகாரத்தை வைத்து மக் &nbsp;களை மிரட்டுகிறார். இது கண்ட னத்துக்குரியது ஆகும். இந்த &nbsp;விவகாரம் தொடர்பாக இந்திய &nbsp;தேர்தல் ஆணையம் உடனடி மற்றும் கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும்&rdquo; என &nbsp;அவர் கூறினார்.</p> <p><strong>சர்ச்சை பேச்சு மூலம் ஊழல் விவகாரத்தை மூடி மறைக்க சதி</strong></p> <p>சுமார் ரூ.1,800 கோடி மதிப்புள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான மற்றும் விதிகளின் படி யாரும் வாங்க &nbsp;முடியாத நிலத்தை ரூ.300 கோடி அடி மாட்டு விலையில் தனது மகன் பார்த் &nbsp;பவாருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் அஜித் பவார். இந்த விவகாரம் பெரும் &nbsp;சர்ச்சையை ஏற்படுத்தியது. &ldquo;இந் தியா&rdquo; கூட்டணிக் கட்சிகள் கடும் எதி ர்ப்பு தெரிவித்தன. இத்தகைய சூழ லில், நிலமோசடி ஊழல் விவகா ரத்தை மூடி மறைக்கவே பாரமதியில் வாக்காளர்களை மிரட்டும் வகையில் பேசி பிரச்சனையை திசை திருப்பி யுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.