இனவெறுப்பின் அழிக்கவியலா சான்று! - ரேகாஅறிவழகன்
7 Mar 2026, 2:07 pm
<p><strong>பாதுகாப்பில்லை.. </strong></p>
<p> பெண்களுக்கு சினிமாவுல இருக்குற பாதுகாப்பு, வெளியில இல்லையோன்னு நினைக்குற அளவுக்கு சமூகம் மாறிக்கிட்டிருக்கு. - நடிகை நந்திதா ஸ்வேதா.</p>
<p><strong>கொலை செஞ்சாச்சு.. ஆனா, சாகலை..</strong></p>
<p>இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் வீரர்கள் அன்றைய போலந்து நாட்டின் ஹிட்லர் நாஜிப்படைகளால் உருவாக்கப்பட்ட சித்ரவதை முகாமான ஆஷ்விட்ஸ் (Auschwitz) முகாமுக்குள் நுழைந்தபோது, அங்கே மறக்க முடியாத காட்சி ஒன்று வெளிப்பட்டது. அது என்னவென்றால், ஒரு செவிலியர், சிறிய காலணிகளின் குவியலையும், அவற்றுக்கு அருகில், சில மணி நேரங்களுக்கு முன்பு இறந்த ஒரு சிறுமியின் உடலையும் கண்டார். அந்தச் சிறுமிக்கு பெயர் இல்லை. அவளுடன் எந்த குடும்பமும் இல்லை. ஒரே ஒரு விவரம் மட்டுமே அவளுக்கு இருந்தது. அவளுடைய தலைமுடி கவனமாக சடை செய்யப்பட்டு, சுத்தமாகவும், சரியானதாகவும் இருந்தது, அன்று காலை அவளுடைய அம்மா அதைத் சீர்படுத்தியது போல இருந்தது. “இறுதி வரை யாரோ அவளை நேசித்தார்கள்,” என்பது மட்டும் தெரிந்தது என்று செவிலியர் கண்ணீருடன் கூறினார். அந்த ஜடைகளில் ஒன்று மீட்கப்பட்டது. <br />
உடையக்கூடியதாக இருந்தாலும், அது இன்னும் அப்படியே, ஆஷ்விட்ஸ் நினைவுச் சின்னத்தில் பாதுகாக்கப்படுகிறது. இது வெறும் முடி அல்ல; அது ஒரு சான்று. இனவெறுப்பினால் அழிக்க முயன்றதற்கான ஒரு சான்று.ன்றிதழ் தரப்படவில்லை. அவருடைய கணவர் ராஜூ மற்றும் மகள் ஆகிய இருவரும் ஒன்பது ஆண்டுகாலமாக அலைகிறார்கள். 28 முறை பல்வேறு துறைகளுக்குக் கடிதம் எழுதியுள்ளனர் சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து, கொலை நடந்தது என்று வழக்குத் தொடரப்பட்டு குருண்டகரும், அவருக்கு உதவியதாக இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏழு ஆண்டுகள் கழித்து அவர்கள் வெளியிலும் வந்துவிட்டார்கள். வழக்கில் தீர்ப்பு வழங்கியபோது, அஸ்வினியின் மகளுக்குத் தகுந்த இழப்பீட வழங்க வேண்டும் என்றும் அதில் இருந்தது. இதுவரையில் அது நடைமுறைக்கு வரவில்லை. கொலை செய்ததாகக் குற்றவாளிகளுக்கு தண்டனையே கொடுத்து விட்டார்கள். ஆனால், நிர்வாக ஆவணங்களின்படி என்னுடைய துணைவியார் அஸ்வினி இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று குமுறுகிறார் கணவர் ராஜூ.</p>
<p> </p>
<p> </p>
<p> </p>
