ஒரே ஒரு ஊர்ல - பழனி சோ.முத்துமாணிக்கம்
15 Nov 2025, 1:19 pm
<p><strong>ஒரே ஒரு ஊர்ல....</strong></p>
<p>“ஒரே ஒரு ஊர்ல , ஒரே ஒரு அம்மா அப்பா.” கதை சொல்லத் தொடங்கினார் தாத்தா. ‘நிறுத்து நிறுத்து தாத்தா‘ கத்தினான் கன்னல். ’அதானே அவங்களுக்கு அக்கா அண்ணன் மாமா சித்தப்பா பெரியப்பா யாரும் இல்லையா தாத்தா ‘ தம்பிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாள் அக்கா தென்றல். ’டேய், என்னங்கடா கதை கேட்டீங்க; சொல்ல விடுங்கடா‘ தாத்தா கெஞ்சிக் கொஞ்சினார். ’தாத்தா.. வீடுன்னா அம்மா அப்பா சொந்தபந்தம்லாம் இருப்பாங்கல்ல. பக்கத்துல வீடு இருக்கும்ல; தெரு இருக்கும்ல ;அங்கேயும் மக்கள் இருப்பாங்கல்ல !’ கன்னலின் விளக்கம் கேட்டு விழித்தார் தாத்தா மனதுக்குள் பெருமிதம் பொங்க. ”எல்லோரும் சேர்ந்து இருந்தாத்தான் அதுக்குப் பேரு ஊரு. இல்லையா தாத்தா“ என்றாள் தென்றல். ”ஆமாங்கடா செல்வங்களே , எல்லோரும் சேர்ந்திருந்தாத் தான் ஊரு. இல்லாட்டித் தாறுமாறு ” என்று தாத்தா சொல்லி கதையை தொடரும் பேரக் குழந்தைகள் தூங்கிவிட்டிருந்தனர்.</p>
