ஐஎப்எஸ் தேர்வு முடிவு தமிழகத்தில் சென்னை மாணவி முதலிடம்
9 May 2026, 10:51 pm
<p><strong>ஐஎப்எஸ் தேர்வு முடிவு தமிழகத்தில் சென்னை மாணவி முதலிடம்</strong></p><p>சென்னை, மே 9 - இந்திய வனப்பணி (ஐஎஃப்எஸ்) தேர்வின் இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. </p><p>இந்திய அளவில் 148 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். </p><p> சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த ரவி லட்சுமிப்பிரியா அகில இந்திய அளவில் 9 ஆவது இடத்தைப் பிடித்து தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளார். </p><p>ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2025 ஆம் ஆண்டுக்கான 150 பதவிகளை நிரப்ப நேர்முகத் தேர்வு நடத்தியது. </p><p>நவம்பர் 2025-இல் நடந்த மெயின் தேர்வு முடிவுகளை அடுத்து, ஏப்ரல் 6 முதல் 15 வரை நேர்காணல் நடைபெற்றது. </p><p>நேர்முகத் தேர்வு முடிந்த மறுநாள் இரவு யுபிஎஸ்சி இணையதளத்தில் இறுதி முடிவு வெளியிடப்பட்டது. </p><p>அகில இந்திய அளவில் சித்தார்த் மூன்றாவது இடத்தையும், ஆஞ்சல் சர்மா ஐந்தாவது இடத்தையும், அனூப் ரெட்டி ஆறாவது இடத்தையும், சங்கல்ப் தீட்சித் எட்டாவது இடத்தையும், அஷ்வனி குமார் ராய் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர். </p><p>சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் வைஷ்ணவி சங்கர் கூறுகையில், “தேர்ச்சி பெற்ற 148 பேரில் 84 பேர் தங்கள் அகாடமி மாணவர்கள். </p><p>தமிழகத்தில் வெற்றி பெற்ற 17 பேரில் 14 பேர் தங்கள் மையத்தில் படித்தவர்கள். </p><p>முதல் 10 இடங்களில் 6 இடங்களை அகாடமி மாணவர்கள் கைப்பற்றியுள்ளனர்” என்று தெரிவித்தார்.</p>
