இந்தியாவில் ஆண்களிடையே அதிகரிக்கும் வாய் புற்றுநோய் - ICMR அதிர்ச்சி தகவல்!
29 Apr 2026, 11:42 am
<p>இந்தியாவில் ஆண்களிடையே வாய்ப்புற்றுநோய் அதிகரித்து வருவதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>ICMR-ன் தேசிய தொற்றாத நோய்கள் தொற்றியல் நிறுவனம் (ICMR-NINE) மேற்கொண்ட இந்த ஆய்வு, 2022ஆம் ஆண்டின் Global Cancer Observatory (GLOBOCAN) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு 11 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.</p><p>இதில் 2024ஆம் ஆண்டு 15.6 லட்சம் புதிய புற்றுநோய் நோயாளிகள் மற்றும் 8,74,404 மரணங்கள் பதிவாகியுள்ளன. தற்போதைய போக்கு தொடர்ந்தால், 2045ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 24.6 லட்சம் புதிய நோயாளிகள் உருவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>இதில், 2024ஆம் ஆண்டில் ஆண்களில் மட்டும் 1,13,000க்கும் மேற்பட்ட புதிய வாய்ப்புற்றுநோய் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.</p><p>ICMR-NINE இயக்குநர் டாக்டர் பிரஷாந்த் மாதுர் கூறுகையில், இந்தியாவில் வாய்ப்புற்றுநோய் இன்னும் தீவிரமான மற்றும் நீடித்த பொதுசுகாதார பிரச்சினையாகவே உள்ளது, குறிப்பாக ஆண்களிடையே அதிகமாக உள்ளது என்றார்.</p><p>“இதற்கான முக்கிய காரணம் புகையிலைப் பயன்பாடு. குறிப்பாக குட்கா, பான், கைனி போன்ற புகையிலைப் பொருட்கள், மதுபானம் மற்றும் பாக்கு மெல்வது ஆகியவை முக்கிய காரணிகள். இவ்வழக்கங்கள் இளமையிலேயே தொடங்கி, சமூக பழக்கமாக ஆழமாக பதிந்துள்ளன,” என அவர் தெரிவித்தார்.</p><p>இந்தியாவில் வாய்ப்புற்றுநோய் பெரும்பாலும் தாமதமான கட்டங்களில் தான் கண்டறியப்படுவதாக ஆய்வு கூறுகிறது. இதனால் அதிக செலவான மற்றும் சிக்கலான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. ஆகவே, ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் மிகவும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
